அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
"இறை தரிசனம் கிட்டும் போது, இறைவனை தரிசித்த பல அசுரர்களின் கதைகளை மனதிலே எண்ணிக் கொள்ள வேண்டும். இறைவனை தரிசித்தும் பல அசுரர்கள் திருந்தவில்லை. தன் அசுரத்தனங்களை விடவில்லை. எனவே, இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற ஒரு பிரார்த்தனையை வைக்கும் பொழுதே "இறைவா! என்னை நீ ஆட்க்கொண்டு விடு, நீ வேறு, நான் வேறு என்றில்லாமல், எப்படி நதி தனியாக இருக்கும் வரை நதி; அது கடலில் கலந்துவிட்டால், இது நதி, இது கடல் என்று பிரிக்க முடியாதோ, அதைப்போல் என்னை ஆக்கிவிடு"என்று ஒரு பிரார்த்தனையை வைத்தால் போதும்.