Quantcast
Channel: அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!
Viewing all 1950 articles
Browse latest View live

சித்தன் அருள் - 886- தாவர விதி!

$
0
0

தாவர விதி என்கிற தொகுப்பில், இந்த வாரம், ஒற்றை மூலி என்கிற வில்வத்தின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

வில்வம் மருத்துவ ரீதியில் பயன்மிக்கதாகும். இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர்.

இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். கோவில் தோரும் இந்த மரத்தை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன்படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது.

வில்வம் கற்ப மூலிகைகளுள் ஒன்றாகும். உடலுக்கு வலுவைக் கொடுத்து நோயின்றி காக்கும் சிறந்த மூலிகை வில்வம். இது இந்தியா முழுவதும் காணப்படும் மரவகையாகும். சைவ கடவுளான சிவனை வில்வ இலை கொண்டே பூஜை செய்கிறார்கள். உடல் சூட்டைத் தணிக்கும் குணம் வில்வ இலைக்கு உண்டு.

இதற்கு சிவத்துருமம், குசாபி, கூவிளம், கூவிளை, மாதுரம், நின்மலி என பல பெயர்கள் உண்டு.  

மருத்துவப் பயன்கள்:  

  1. இதன் வேர் நோயை நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். 
  2. குருதிக் கசிவை நிறுத்தும். 
  3. பழம்  மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும். 
  4. பழ ஓடு காய்ச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும். 
  5. பிஞ்சு விந்து வெண்ணீர்க்  குறைகளையும் நீக்கும். 
  6. பூ மந்தத்தைப் போக்கும். 
  7. வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். 
  8. இதன்  இலை காச நோயைத் தடுக்கும். தொற்று வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். 
  9. இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும். 
  10. பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். 
  11. பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு  வலியைப் போக்கும். வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது, காசநோயை குணமாக்கும். 
  12. சளி, தடிமன், மூக்கடைப்பு, கண்  எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம். 
  13. வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.  
  14. வில்வப் பழமும் எள் எண்ணெயும் சேர்த்து தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி காதில் விட்டு பஞ்சால் அடைக்க வேண்டும்  நாளடைவில் செவி நோய்கள் நீங்கிவிடும். 
  15. வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால்  பற்களில் உண்டாகும் பல நோய்கள் போம். 
  16. ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் சென்று, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு  நீரை மட்டும் அருந்தினால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும். ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத  வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும். 
  17. வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும்  அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும் பாண்டு வியாதி பறந்தோடும். 
  18. வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.
  19. வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். 
  20. பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு  அருமருந்தாகும். 
  21. கொலஸ்ட்ரால் வியாதி கட்டுப்படுத்தப்படும், 
  22. இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும்.
  23. அல்சர் அணுகவே அணுகாது, ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும், 
  24. தோல் மீது பூசிவர தோல் அரிப்பு குணப்படுத்தப்படும். வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது.  
  25. வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும். 
  26. நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். 
  27. வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் புழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர்  வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும். உடல்  வெப்பமும் நீங்கும். குடல் திடமடையும்.
  28. வில்வ இலைச் சாறை எடுத்து அதில் மிளகுத்தூள் சேர்த்து ஒரு மண்டலம்காலையும், மாலையும் பத்திய முறைப்படி இறைவனை வணங்கி அருந்தி வந்தால் காமாலை மற்றும் இரத்த சோகையால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.
  29. வில்வ இலைச் சாறுடன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில்அருந்தி வந்தால் மூக்கில் நீர் வடிதல், சுரம், இருமல், தொண்டைக்கரகரப்பு, வாய் குளறல், மயக்கம் தீரும். தொடர்ந்து 40 நாட்கள் கற்பமுறைப்படி அருந்தி வந்தால் மேற்கண்ட பிணிகளிலிருந்து முழு விடுதலை பெறலாம்.
  30. வில்வ பூவை உலர்த்தி பொடி செய்து நீர்விட்டு காய்ச்சி அருந்தினால் மாந்தம் நீங்கும்.
  31. வில்வ இளம் பிஞ்சை அரைத்து 5 கிராம் அளவு எடுத்து எருமைத் தயிரில் கலந்துஅருந்தினால் வயிற்றுப்புண், குடல்புண், தொண்டைப் புண் ஆறும். சிறுபிள்ளைகளுக்கு கொடுத்தால் வயிற்றுக் கடுப்பு, சீதக் கழிச்சல் நீங்கும்.
  32. வில்வ காயை பசுவின் பால் விட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்துவந்தால் மண்டைச் சூடு, கண் எரிச்சல் நீங்கி கண்கள் குளிர்ச்சியடையும். (அகத்தியர் குணபாடம்).
  33. வில்வ இலை, இஞ்சி, சோம்பு சேர்த்து குடிநீராக்கி ஒரு மண்டலம் கற்பமுறைப்படி பத்தியம் கடைப்பிடித்து அருந்தி வந்தால் மூல நோய் குணமாகும்.
  34. வில்வ வேர், சிற்றாமுட்டி வேர், சுக்கு இம்மூன்றையும் சேர்த்துக் காய்ச்சி எட்டில் ஒன்றாய் ஆன பதத்தில் வடித்து தேன் கலந்து அருந்தினால் கொடியமுப்பிணியும் தீரும்.
  35. வில்வத்தின் கனி, காய், இலை, வேர் முதலானவற்றை மணப் பாகு, ஊறுகாய்,குடிநீர், தைலம் இதில் எதாவது ஒன்று தயாரித்து ஒரு மண்டலம் உட்கொண்டால் உடலுக்கு அழகையும், ஆண்மையையும் கொடுக்கும். வாய் குழறிப் பேசும் தன்மை நீங்கும். (தேரையர் நளவெண்பா)  
வில்வத்தின் ஒரு வகையே மகா வில்வம். இது குளுமைத் தன்மை கொண்டது. வில்வ இலைகளைவிட சற்று சிறியதாய், வட்ட வடிவில் காணப்படும். சுவையில் வில்வத்தின் இலையை ஒத்திருக்கும். கொடியைவிட சற்றுப் பெரியதாய் இதன் கிளைகள் இருக்கும். இலைகள் கூட்டிலைகளாய் காணப்பட்டு கடைசியில் மூன்று இலைகளாய் முடியும்.

அந்த மூன்று இலைகளும் சிவன், விஷ்ணு, பிரம்மா என்னும் மூவரும் நானே எனக் காட்டுவதாய் அமையும். அந்த மகா வில்வத்தை மருந்தாக்கும் முறையை இனி காண்போம்...

சர்க்கரை நோயுக்கு அற்புத மருந்து...

சர்க்கரை நோயுள்ளவர்கள் மகா வில்வத்தை மருந்தாக்கினால் மிகச் சிறந்த பலனைக் காணலாம். மகா வில்வ இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் அரை ஸ்பூன் கருஞ்சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரிலிட் டுக் கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து அதிகாலையில் சாப்பிட்டு வர, 48 நாட்களில் சர்க்கரையின் அளவு சராசரி நிலைக்கு வரும். சர்க்கரை வியாதியால் உண்டாகும் பிற விளைவுகளும் படிப்படியாய் மறையும்.

குடற்புண்ணை குணப்படுத்த...

குடல் சார்ந்த நோய்கள் அனைத்திற்கும் மகேசன் அருளிய மகா வில்வமே மருந்தென்றால் மிகையல்ல. குடற்புண்ணால் அவதி யுறுவோர் கீழ்க்காணும் மருந்தைத் தயாரித்துச் சாப்பிட்டுப் பாருங்கள். மகா வில்வத்தினுள் சிவனே உறைந்து, உங்களை செவ்வனே குணப் படுத்துவதை உணர்வீர்கள். உலர்ந்த மகா வில்வ இலை 50 கிராம், நெல்லிமுள்ளி, கடுக்காய், தான்றிக்காய், ஓமம், மாம்பருப்பு, வெந்தயம், சீரகம், மஞ்சள் ஆகியவை வகைக்கு 25 கிராம்- இவையனைத்தையும் ஒன்று கலந்து தூள் செய்து கொள்ளவும். பின்னர் இதனைச் சலித்துப் பத்திரப்படுத்தவும் .

இதனை காலை- மதியம்- இரவு மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக இரண்டு முதல் ஐந்து கிராம் அளவு சாப்பிட்டு வர, 48 நாட்களில் குடற்புண்கள் முழுமையாய் குணமாகும். இது சித்தர்கள் அருளிய சிறப் பான மருந்து. திட சித்தமாய் உண்டு வருபவர்கள் சீக்கிரமே குணமடைவார்கள்.

உடல் வலிவு பெற...

மகா வில்வ வேர் 50 கிராம் அளவில் எடுத்து ஒன்றிரண்டாய் சிதைத்து, ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிது மஞ்சள் சேர்த்து, ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து, தினசரி அதிகாலை யில் தொடர்ந்து இரு மாதங்கள் சாப்பிட்டு வர, மேனி அழகு பெறும்; முகம் காந்தமாய் ஜொலிக்கும்; ஆண்மை விருத்தியாகும்; குரலில் ஓர் காந்த சக்தி, ஈர்ப்பு சக்தி உண்டாகும்.

இளைப்பு நோய் குணமாக...

மகா வில்வ வேர், தூதுவளை வேர், கண்டங்கத்தரி வேர், முசுமுசுக்கை வேர், மிளகு, மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் வீதம் எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்து கொள்ளவும். இதனை காலை- மாலை இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவில் தேனில் குழைத்து உண்டுவர, சளிக்கட்டு, இருமல், ஆஸ்துமாவில் உண்டாகும் மூச்சிரைப்பு, சைனஸ், தும்மல், காசநோய் போன்றவை மாயமாய் விலகும்.

மஞ்சள் காமாலை குணமாக...

மகா வில்வ வேர், கீழாநெல்லி வேர், நெல்லிமுள்ளி ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து, அரை லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து, காலை- மதியம்- இரவு மூன்று வேளையும் ஏழு தினங்கள் தொடர்ந்து குடித்து வர மஞ்சள் காமாலை குணமாகும். கல்லீரல் பலப்படும்; கல்லீரல் சார்ந்த பிற நோய்களும் தணியும்.

கண் நோய்கள் குணமாக...

மகா வில்வத் தளிர் இலைகளை நெருப்பில் வாட்டி, அதைத் துணியில் முடிந்து வெது வெதுப்பாய் கண்களில் ஒற்றிவர, கண்சிவப்பு, கண்ணெரிச்சல் போன்றவை மாறும்.

மகா வில்வத்தால் ரத்த சுத்தி உண்டாகும்; நன்கு செரிமானம் உண்டாகும்; பசியைத் தூண்டும்; மலத்தை நன்கு இளக்கும். மொத்தத் தில் சிவனை நாட சுத்த தேகத்தை உண்டாக்கும்

மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி ,சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது. இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க  வேண்டும். வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதியவற்றாலும் பூசை  செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது. 

சித்தன் அருள்................. தொடரும்!

சித்தன் அருள் - 887 - சனிப்பிரதோஷ நாளில் இறைவன் தரிசனம்!

$
0
0

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

1. இன்று பிரதோஷம். அதுவும் சனிக்கிழமை வருகிற பிரதோஷம். இறைவன் ரூபம் ஆகாயத்தில் தெரிகிற ஒரு பழைய வீடியோ கையில் அகப்பட்டது. அதை, உங்கள் தரிசனத்துக்காக சமர்ப்பிக்கிறேன்.


2. ஒரு முப்பது நிமிடங்கள் ஓடுகிற "ஓம்"மூல மந்திரம் வீடியோவும் கீழே தருகிறேன். இன்றைய தினத்தை நல்லபடியாக கடந்து செல்லுங்கள்.


3. ஆகஸ்ட் ஐந்தாம் தியதி, அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான, அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை போன்றவை நடக்க இருப்பதால், அன்றைய தினம் அகத்தியர் அடியவர்கள், தங்கள் இல்லத்தில் காலை 10.30 மணிமுதல் 12.30 மணிவரை ஒரு விளக்கேற்றி வைத்து, இறைவனிடம், "எல்லாம் நல்லபடியாக நடத்திக்கொடு" என ஒரு வேண்டுதலையும் சமர்பிக்கும்படியும், சித்தன் அருள் சார்பாக, உங்கள் அனைவரிடமும் வேண்டிக்கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............... தொடரும்! 

சித்தன் அருள் - 888 - பித்ரு தோஷம் நீங்க >>>திதி சம்ரக்ஷண பெருமாள்!

$
0
0





வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

பித்ரு தோஷங்களால் ஒருவரின் ஜாதகத்தில் பலவிதமான தடங்கல்கள் இருக்கும். அவை, பித்ரு தோஷம், பித்ரு சாபம், இறை அபசாரம், இறை அடியார் அபசாரம், பித்ருக்கள் இறை சொத்தை அபகரித்து அனுபவித்து, பின் தலைமுறைக்கு கொடுப்பது போன்ற பல்வேறு, நாம் அறிந்திராத நிகழ்ச்சிகளால், இப்பிறவியில் அனுபவிக்க நேரிடும். இவர்களுக்கான சரியான பரிகாரங்களை செய்தால் அன்றி, தடங்கல்கள் (திருமணம், சந்ததி இன்மை, வருமானம், தொழில்/வேலை இல்லாமாய், நோயினால் தொடர்ந்து அவதிப்படுவது, நிம்மதி இன்மை, திருப்தி இன்மை ETC .,) விலகி, விதி வழிவிடுவதில்லை.

பாதிக்குமேல் நமக்கிருக்கும் பிரச்சினைகளுக்கு, பித்ரு தோஷமே காரணம் என்கிறார்கள். பித்ரு தோஷத்தை, இறை ஏற்றுக்கொண்டு, அவரே திதி சம்ரக்ஷ்ண பெருமாளாக அமர்ந்து நாம் செய்கின்ற திதியை தான் வாங்கிக்கொண்டு, நம் பித்ருக்களை ஆசிர்வதிக்கும் தலம்தான், நென்மேலியில் அமைந்துள்ள, ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்.

இனி, கோவிலுக்குள் செல்வோம்.

பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா? 

பித்ரு கடன்  செலுத்துவது, ஹிந்துக்களுக்கு முக்கிய கடமையாக கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் இல்லாமல் இறப்பவர்களுக்கு யார் தர்ப்பணம், திதி கொடுப்பார்கள்? மேலும், பலருக்கு தங்களின் முன்னோரின் இறந்த திதி தெரியாது. இவர்கள், எப்படி திதி  கொடுப்பது? தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு எப்படி திதி  கொடுப்பது? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையாக இருக்கிறார், லட்சுமி நாராயண பெருமாள். 

செங்கல்பட்டு அருகே, நென்மேலி எனும் கிராமத்தில் அமைந்து உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில், சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட தலமாகப் போற்றப்படுகிறது. செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த திருக்கோவில்.

இந்தக் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி, சிரார்த்த ஸம்ரட்சண நாராயணர் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.  இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம், அர்க்ய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் அழைக்கப்படுகிறது.  காசி மற்றும் கயாவுக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது.

ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்த ஸ்ரீயாக்ஞவல்கியரைக் குருவாகக் கொண்ட சுக்ல யஜுர் வேதத்தை சேர்ந்த யக்ஞ நாராயண சர்மா – சரஸ வாணி தம்பதி, இந்தக்  ஆலயத்தின்  பெருமாளின் மீது, அதீத  பக்தி கொண்டிருந்தனர். இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தை, இந்த ஆலயத்தின் பணிகளுக்கு  செலவு செய்து விட்டனர்.  இதனால், அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  அரச தண்டனையை ஏற்க விரும்பாமல், திருவிடந்தை ஆலய  திருக்குளத்தில் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். எனினும், தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மன வருத்தத்துடன்  இறந்தனர்.  ஆகையினால், அவர்களின் மனவருத்தத்தை தீர்க்கும் வகையில், இந்த  ஆலயத்தின் பெருமாளே, தம்பதிக்கு ஈமகடன்கடன்ளை செய்ததாக, கோவிலின் தலவரலாறு கூறுகிறது. 

பின்னர், திவானின் வேண்டுகோளுக்கு இணங்க, சந்ததிகள் இல்லாதவருக்கும், திதி செய்ய இயலாதவர்களுக்கும், பெருமாளே திதி செய்து வைப்பதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். 

தினமும், பகல், 12 மணி  முதல், 1 மணி வரை உள்ள காலம், பித்ருக்களின் காலமாக கருதப்படுகிறது

இந்த ஒரு காலம் மட்டும், ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார் பெருமாள்.

எனவே, இங்கு திதி செய்ய விரும்புபவர்கள், பித்ரு காலத்தில் நடக்கும் பூஜையில், தங்கள் முன்னோர்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு, பெருமாளிடம்  சுவாமியிடம் சமர்ப்பிப்பதே, திதி சம்ரட்சணம்.

பெருமாளுக்கு, வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்ந்த துவையலும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இதை மட்டும் ஏற்றுக் கொண்டு, பித்ருக்களை திருப்தி செய்கிறார் பெருமாள்!

அவரவர் பித்ருக்கள் திதியிலோ, அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ, ஆலயத்தில் பித்ரு கால பூஜையில் கலந்து கொண்டால், கயாவில் சென்று திதி கொடுத்த பலனைக் கொடுக்கும். திதிகொடுக்க விரும்புபவர்கள், காலை, 11 மணிக்குள் ஆலயத்துக்கு வர வேண்டும். மஞ்கள், எள், தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், தாம்பூலம், பழம் ஆகியவற்றை பெருமாளிடம் சமர்பித்து, தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து  கொள்ள வேண்டும். 

பின், விஷ்ணு பாதம் எனும் பெருமாளின் திருவடிக்கு அருகில், திதி செய்பவர், தங்கள் முன்னோருக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து, பெருமாளிடம் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்பிப்பதே, திதி சம்ரட்சணமாகும். 

பித்ரு தோஷம் இருந்தால், வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாது. சாண் ஏறினால், முழம் சறுக்கும் என்பதாகவே இருக்கும். பித்ரு தோஷம் நீங்க, இந்த ஆலயத்துக்கு சென்று, பித்ரு கால பூஜையில் பங்கேற்க வேண்டும். 

மஹாளய பட்ச காலத்தில்,  இந்த ஆலயத்துக்கு சென்று, பித்ரு பூஜையில் பங்கேற்றால், முன்னோர்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அதனால், நமக்கு பித்ருகளின் முழுமையான அருளும் கிடைக்கும்.




ஒவ்வொருவரின் குடும்பத்தின் நிலையையும் பரிசோதித்து, அவரவர் தீர்மானித்து, இத்திருக்கோவிலில் திதி கொடுத்து, பயனடையலாம்.

சித்தன் அருள் ................. தொடரும்!

சித்தன் அருள் - 889 - தாவர விதி!

$
0
0

தாவர விதி என்கிற தலைப்பில் இந்த வாரம் "பவிழமல்லி"செடியை பற்றி தெரிந்து கொள்வோம்.

பாரிஜாதம் என்றும் அறியப்படுகிற பவிழ/பவள மல்லியை தேவலோகத்திலிருந்து பூமிக்கு கிருஷ்ணன் கொண்டு வந்ததாக இந்திய புராணக் கதையொன்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணனின் மனைவியரான சத்திய பாமைக்கும் ருக்மிணிக்கும் இம்மரத்தைக் குறித்துச் சண்டை எழுந்தததாயும், அதைத் தீர்க்கும் முகமாக மரம் பூக்கும் காலங்களில், பவளமல்லிப் பூக்கள் ருக்மிணியின் தோட்டத்தில் உதிரும் வகையில் மரத்தைச் சத்தியபாமையின் தோட்டத்தில் கிருஷ்ணர் நட்டு பிணக்கைத் தீர்த்ததாயும் மேலும் அக்கதையில் கூறப்படுகிறது.

இன்னுமொரு புராணக்கதையும் பவளமல்லி தொடர்பாகச் சொல்லப்படுகிறது. பாரிஜாதகா எனும் இளவரசி சூரியன் மேல் விருப்புற்றதாயும் சூரியன் அவளைக் கைவிட்டபோது தன்னை அழித்துக் கொண்டாள் எனவும் சொல்லப்படுகிறது. அவள் எரிந்த சாம்பலில் இருந்து தோன்றிய மரமே பவளமல்லி மரமெனவும், தன்னைக் கைவிட்ட சூரியனைப் பார்ப்பதைத் தாங்க முடியாமல் இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து, கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் எனவும் கருதப்படுகிறது.

பல்வேறு நன்மைகளை கொண்ட பவளமல்லி சொரசரப்பான இலைகளை கொண்டது. கொத்தான பூக்களை உடையது. காம்புகள் சிவப்பு நிறமும், பூக்கள் வெள்ளை நிறமும் உடையவை. இந்த பூக்கள் நல்ல மணத்தை கொண்டது.

இம்மரம் 3 - 4 மீட்டர் உயரத்திற்கு மிக விரைவாக வளரும். நேரடியாக வெயிலிலேயே அல்லாது கொஞ்சம் நிழலிலும் வளர்க்கப்பட வேண்டும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் கூரான முனைகளுடையவையாகக் காணப்படும். கிளை நுனிகளில் பூக்கும் இதன் பூக்கள் வெண்ணிறமாயும் பவள நிறத்திற் காம்பைக் கொண்டவையாயும் உள்ளன. இப்பூகள் 5-7 இதழ்களைக் கொண்டவை. இப்பூக்கள் இரவிற் பூத்து காலையில் உதிர்ந்து விடும். இதன் பழங்கள் தட்டையாக, வட்ட வடிவில் காணப்படும். இரு விதைகளைக் கொண்டிருக்கும். இம்மரத்தின் பூவின் வாசம் 100 அடி சுற்றளவுக்கு வீசும் தன்மை கொண்டது. இதன் பூ முன்னிரவில், அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் பூப்பதால் வடமொழியில் பிரம்மதர்ஷன் புஷ்பம் என்று அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் கோடைகாலத்தில் உதிர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாட்டை வடிகட்டும் தன்மை கொண்டது.    

சிறிய வகை மரமாக வளரும் பவிழமல்லி, விடியற்காலையில் அருமையான நன் மணத்தை வெளியிடும். இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய தாவர வகை. கிருமி நோய்க்கு அருமருந்து, வாயுவை சுத்தப்படுத்தும், பூசைக்கும் மிக சிறந்தது என கருதப்படுகிறது.
  • இலைகள், பூக்கள், விதைகள், வயிற்றுத் தொந்தரவு, மூட்டு வலி, காச்சல், தலைவலி போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. 
  • இலை வியர்வை, சிறுநீர், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கி மலமிளக்கும். 
  • வேர் பட்டை கோழையகற்றும், பித்தத்தை சமப்படுத்தும். 
  • இதன் இலைக் கொழுந்தை இஞ்சிச் சாற்றில் கலந்து முறைக் காச்சலுக்கு தினம் இரு வேளை கொடுத்தால் குணம் காணலாம். 
  • இம்மர இலையைச் சுடுநீரில்  போட்டு நன்றாய் ஊறவைத்து நாள் ஒன்றுக்கு இரு வேளை குடித்து வர, முதுகுவலி, காச்சல் போகும். 
  • வயிற்றில் புழுக்கள் வெளியேற இவ்விலைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அத்தோடு தேன் கலந்து அருந்தினால் போதும், நல்ல பலன் கிடைக்கும்.
  • மேலும், இதன் இலைகளை 200 கிராம் எடுத்து வந்து மண்சட்டியில் போட்டு பதமான அனலிலிட்டு வறுத்து, ஒரு லிட்டர் நீர் விட்டு அரை லிட்டராகச் சுண்டக்  காய்ச்சி, இருதய வலுவற்ற குழந்தைகளுக்கும், இரத்தம் அதிகம் இல்லாதவர்களுக்கும் அரை அவுன்ஸ் முதல் இரண்டு அவுன்ஸ் வரை நாளைக்கு இரு வேளை  கொடுக்கு, குணம் பெறலாம். 
  • நிபா வைரஸ் பாதிப்பைப் பொறுத்தவரை அவற்றின் அறிகுறி குணங்களான சளி, காய்ச்சலைத் தடுக்கும் ஆற்றல் பவளமல்லிக்கு உண்டு என்றும் கூறப்படுகிறது. 
  • இதன் இளங்கொழுந்தை இஞ்சிச் சாற்றில் அரைத்து, தினமும் இருவேளை கொடுத்தால் காய்ச்சல் தீரும்
  • இதன் இலையை வெந்நீரில் போட்டு நன்றாக ஊறவைத்து தினமும் இருவேளை கொடுத்து வந்தால் காய்ச்சலுடன் முதுகுவலியும் நீங்கும்’ என்றும் சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 

பவளமல்லி இலை கஷாயம் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: பவள மல்லி இலை - 7, மிளகு - 2, எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன். செய்முறை: தண்ணீரில் பவள மல்லி இலையின் சாறு எடுத்து அதை கொதிக்க வைத்து 100 மி.லி. ஆக காய்ச்சி, அதனுடன் மிளகு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து உணவுக்கு முன் மூன்று வேளை பருகி வர நிபா வைரஸ் அழியத் தொடங்கும் என்று சித்த மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன.

  • உடல் வலி, காய்ச்சல், சளி, இருமல், வயிற்று புழுக்கள் பிரச்னைகளுக்கு பவளமல்லி மருந்தாகிறது. பவளமல்லி இலைகளை பயன்படுத்தி காய்ச்சலை தணிக்கும் மருந்து தயாரிக்கலாம்.காய்ச்சலை தணிக்க: தேவையான பொருட்கள்: பவளமல்லி இலைகள், பனங்கற்கண்டு, இஞ்சி. பவளமல்லி இலைகள் 5 எடுத்து நீர்விட்டு நன்றாக அலசி எடுக்கவும். இதனுடன் சிறிது இஞ்சி தட்டி போடவும். சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் இருவேளை குடிப்பதால் சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் சரியாகும்
  • சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
  • ஹீமோகுளோபின் அதிகரிக்கும். 
  • பவளமல்லி இலைகள் நோய் நீக்கியாக விளங்குகிறது. வியர்வையை தூண்டக்கூடியது. 
  • காய்ச்சலை தணிக்க கூடியது. 
  • வலி, வீக்கத்தை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
  • பவளமல்லி இலைகளை தேனீராக்கி குடிப்பதால் விஷ காய்ச்சல்கள் அனைத்தும் விலகிப்போகும். 
  • இடுப்பு வலி, கைகால் வலி உள்ளிட்ட வலிகளையும் போக்க கூடியதாக பயன்படுகிறது.
  • பூஞ்சை காளான்களை போக்குகிறது.

சித்தன் அருள்............. தொடரும்!

சித்தன் அருள் - 890 - ஒரு நாடி அருள்வாக்கு!

$
0
0
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் ஒரு அடியவர் நாடியில், அகத்தியரை நாடி, தன் தனிப்பட்ட வாழ்க்கையின் விஷயங்களை கேட்டார். அவருக்கும் பதிலளித்து, விளக்கமாக கூறுகையில், பொதுவாக ஒரு சில விஷயங்களை கூறி அதை அனைவருக்கும் தெரிவிக்குமாறு உரைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் எல்லா திருவோண நட்சத்திரத்தன்றும் மஞ்சள்பொடி+பச்சைக்கற்பூரம்+துளசி நீரிலிட்டு "ஓம் ஸ்ரீ மாயமாலனே நமஹ"என 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை, பூமியில், மரத்தடியில் எல்லாஉயிர்களின் மோக்ஷத்திற்காகவும் வேண்டிக்கொண்டு விடச்சொன்னது ஞாபகம் இருக்கலாம். (சித்தன் அருள் தொகுப்பு - 840 & 859). "என் சேய்கள் செய்த/செய்கிற திருவோண பூசையை இறைவன் மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறார். ஆசிர்வாதமும் அளித்துள்ளார். பூசையை எல்லா மாதமும் செய்கிறவர்கள் அனைவரும் க்ஷேமமாக, சிறப்பாக வாழ்வார்கள். இத்தருணத்தில், யாம் முன்னரே உரைத்த நீதிகளை இங்கு உரைக்கின்றோம்"எனக்கூறி கீழ்வரும் மூன்று அகத்தியர் இயற்றிய அறிவுரை பாடல்களையும், அனைவரையும் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.

அடியவர்களே! இங்கு அடியேனுக்கு ஒன்றுதான் தெரிவிக்க வேண்டியுள்ளது. திருவோண நட்சத்திர உத்தரவை சித்தன் அருளில், தெரிவித்த பொழுது அனைவரும் படித்தார்கள். எனினும், ஒரு சிலரே அந்த உத்தரவை நிறைவேற்றி வருகிறார்கள் என புரிகிறது. இதுவரை செய்யாதவர்களும், வேண்டிக்கொண்டு நிறைவேற்றலாமே! அவர் அருள் கிடைக்குமே.

எனக்கு தாய், தந்தை இருக்கிறார்களே, நான் இதை செய்யலாமா? நான் பெண்ணாயிற்றே, அல்லது மணமாகவில்லையே, இது பிதுர் தர்ப்பணமா, என்கிற கேள்வியெல்லாம் பலர் மனதிலும் ஏழும். இவை அனைத்திற்கும் ஒரே பதில்தான். "இல்லை! இது பிதுர் தர்ப்பணம் இல்லை"பொதுவான ஒரு வேண்டுதல். பாருங்கள் துளசி+பச்சை கற்பூரம்+மஞ்சள்பொடி+நீர். இவைதான் எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் பிதுர் தர்பணத்திற்கு உபயோகிக்கும், எள்ளு, அரிசி, தர்ப்பை புல் போன்றவை கிடையாது. யார் பெயர் நட்சத்திரமும் கூறுவது கிடையாது. இறைவன் நாமா மட்டும்தான். இதற்குமேல் சொல்வதாகிற்கில்லை.

விருப்பமுள்ளவர்,
சந்தேகம் தெளிந்தவர், 
இறை அருள் பெற விழைபவர்,
அகத்தியர் உத்தரவை சிரம் மேற்கொண்டு நிறைவேற்ற விரும்புபவர்கள்,

எல்லா மாதமும் வரும் "திருவோண"நட்சத்திர தியதியில் (இந்த வருட திருவோண நட்சத்திர நாட்கள் சித்தன் அருள் வலைப்பூவில் மேல்பாகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது) செய்து அருள் பெற்றுக்கொள்ளுங்கள்.
  
ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும் 
உத்தமனாய் பூமிதனில் இருக்கவேணும் 
பருவமதிற் சேறு பயிர் செய்ய வேணும் 
பாழிலே மனதை விடான் பரமஞானி 
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி 
வருவார்கள் அப்பனே அநேகங்கோடி 
வார்த்தையினால் பசப்புவார் திருடர்தானே!

இறைவன் ஒருவன்தான் உண்டு. அவனை வணங்க வேண்டும். நல்லவனாய் பூமியில் வாழ வேண்டும். தக்ககாலத்தில் விவசாய பயிர் செய்ய வேண்டும். தீய வழிகளில் மனதை விடக்கூடாது. உலகில் திருடர்கள் பலர் திரிவார்கள். இன்னும் பாபபீர் வருவார்கள். இனிய வார்த்தைகளால் பேசுவார்கள்.

சாத்தியமே வேணுமடா மனிதனானால் 
சண்டாளஞ் செய்யாதே தவறிடாதே 
நித்திய கர்மம் விடாதே, நேமம் விட்டு 
நிட்டையுன்சமாதி விட்டு நிலைபே ராதே 
புத்தி கெட்டு திரியாதே; பொய் சொல்லாதே
புண்ணியத்தை மறவாதே, பூசல் கொண்டு 
கத்தியதோர் சள்ளியிட்டு தர்க்கியாதே, 
கர்மியென்று  நடவாதே, கதிர்தான் முற்றே.

மனிதன் என்றால் வாக்கில் சத்தியம் வேண்டும். பிறரைக் கெடுக்கும் சண்டாளத்தனம் கூடாது. நித்ய கர்மங்களை விசாதே. நியமங்களை விடாதே. சமாதியினின்று வெளிவராதே. நற் புத்தியில்லாமல் அலையாதே, பொய் சொல்லாதே, புண்ணியத்தை மறவாதே. வாக்குவாதம் யாரிடமும் செய்யாதே.

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா 
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா 
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா 
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மை யாமே!

மனதின் உள்ளே பகைகள் (காம குரோத, மத, மாஸ்ச்சர்யங்கள்) நீங்கி, நன்றாயிருந்தால் மந்திரம் சொல்ல வேண்டாம்.மனம் நன்றாக அமைந்தால் வாயுவை உயர்த்துகிற யோகா செய்ய வேண்டாம். மனம் செம்மையானால், வாசியை நிறுத்துகிற பிராணாயாமப்பயிற்சி செய்ய வேண்டாம். மனம் செம்மையானால், நீங்கள் கூறுகிற வார்த்தைகள், மந்திரங்கள், ஞானியின், சித்தனின் வார்த்தைகள் போல், செம்மையாகிவிடும். வாக்கு பலிதம் உண்டாகும். இதன் உட்பொருள், நமது உட்பகைகள், ஆணவம், நீங்கினால், நாம் இறைவனை எளிதாக அடைந்துவிடலாம். தனியான மந்திரங்கள், அதற்கான செயல்கள் போன்றவை வேண்டாம்.

சர்வம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...................... தொடரும்!

சித்தன் அருள் - 891 - தாவர விதி!

$
0
0

தாவர விதி என்கிற தலைப்பில் இந்த வாரம் சீரகம்-பிரண்டை என்ற இரு மூலிகைகளை பற்றி தெரிந்து கொள்வோம். இவை இரண்டும் ஒற்றை மூலியாகவும் வேலை பார்க்கும், அதே நேரத்தில் பிற மூலிகைகளுடன் சேர்ந்து, அவற்றின் வீரியத்தை கூட்டி நோயை விரட்ட உதவும் சக்தியை உருவாக்கும் "உதவி மூலிகையாகவும்"பயன்படும்.

1. சீரகம் ஒரு மருத்துவ மூலிகை:-

மனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை! உணவை சுவையாக்கவும் செரிக்கவும் சீரிய ஒரு மூலிகை! "சீரகத்தை"இரண்டாக பிரித்தால் "சீர்+அகம்"என ஆகும். உள்சென்ற சீரகம் அனைத்து உடல் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்யும் என்பதால் அந்த பெயர் வந்தது.

இது ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது. Cumin என்ற வார்த்தையே அரேபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப்பட்ட வரலாறு சான்று சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது. தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக உபயோகித்து வந்தனர் என்பது தெரிகிறது. சித்த மார்கத்தில், ஆன்மீகத்தில் நுழைவோருக்கு, அவர்கள் உடல் சுமக்கும் எதிர்மறை சக்தியை உடலை விட்டு கழுவிவிட, உடல் சுத்தம் பெற சீரகத்தை 48 நாட்கள் தொடர்ந்து குடிக்கும் நீரில் கொதிக்க வைத்து பருகி வர குருநாதர்கள் அறிவுறுத்துவார்கள்.
  • சீரகத்திலிருந்து 56% எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் தைமால் என்கிற எண்ணை வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

  • சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

  • திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
  • மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும். 
  • சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். 
  • சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.
  • சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப்பொருமல் போய்விடும்.
  • ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
  • சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
  • செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
  • உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
  • திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.
  • சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
2. பிரண்டை – மருத்துவ பயன்கள்:-

பிரண்டை சதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம்.  மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை; விதை வழவழப்பானவை; வஜ்ரவல்லி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு. வஜ்ரவல்லி என்கிற பெயர்க் காரணம் உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டையின் குணத்தினாலேயே ஏற்பட்டது.பிரண்டைச் சாறு உடம்பில் பட்டால் அதிகமான அரிப்பும் நமைச்சலும் ஏற்படும். வேர், தண்டு ஆகியவை அதிகமான மருத்துவப் பயனுள்ளவை. தண்டு கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. 

பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். இதனையே நாம் பொதுவாக உபயோகிக்கலாம்.
  • பிரண்டை உடலைத் தேற்றும்; 
  • பசியைத் தூண்டும்; 
  • மாதவிலக்கைத் தூண்டும்; 
  • மந்தம், குன்மம், இரத்தக் கழிச்சல், அஜீரணம் ஆகியவற்றைக் குணமாக்கும்.
  • பிரண்டைத் தண்டுகளைச் சேகரித்து, மேல் தோலைச் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு தேவையான அளவு நெய்யில் வதக்கி, தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து அரைக்க வேண்டும். பின்பு கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.
  • பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும்.
  • நன்றாக முற்றிய பிரண்டைத் தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும் இந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும்.
  • பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் ஒழுங்காக வரும்.
  • பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும். மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் இது உதவுகிறது.
  • மேலும் பிரண்டையை நன்கு காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு நீரில் குழைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் பூசி வரலாம்.பிரண்டையின் வேரை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை மாலை வேளைகளில் பத்து கிராம் அளவு சாப்பிட்டு வரவேண்டும்.
  • அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போட வேண்டும்.
சித்தன் அருள்................... தொடரும்!

சித்தன் அருள் - 892 - ஓதியப்பரின் திருநட்சத்திரம்!

$
0
0

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

வரும் திங்கட்கிழமை, 17/08/2020 அன்று, போகர் சித்தரின் கூற்றின்படி, ஆவணி மாதம், பூசம் நட்சத்திரத்தில், ஓதியப்பர் என்கிற சுப்ரமண்யரின் அவதார நட்சத்திரம் வருகிறது.

யாரும், எங்கும் போகமுடியாத இந்த சூழ்நிலையில், அன்றைய தினம், உங்கள் அனைவருக்கும் நேரம் கிடைக்கும் பொழுது, அவரவர் இல்லத்தில் விளக்கேற்றி, ஒரு முறை, ஸ்வாமியின் முன் அமர்ந்து, கந்த சஷ்டி மந்திரத்தை ஓதி, லோகம் சீக்கிரமே, க்ஷேமமாக மாற வேண்டும் என வேண்டிக் கொண்டு, அவர் பாதத்தில் தீர்த்தத்தால் அர்க்யம் விடும்படி, அகத்தியப்பெருமானின் "சித்தன் அருள்"சார்பாக வேண்டிக் கொள்கிறேன்.

நம்முடைய திட்டமிடல் இங்கு ஒன்றும் இல்லை, இறைவனின் திட்டம் புரிந்து கொள்வது மிக மிக கடினம். அறிந்தோ, அறியாமலோ, நல்லவர்களும், லோக ஷேமத்திற்காக, ஒரு சில கெட்ட கர்மாக்களை சுமந்து நடந்ததால், அனைவரையும் இந்த காலத்தில், இறைவன் அசைய விடாமல் செய்தான்.

இனி மேல்நடப்பது நல்லதாக அமைய வேண்டுமென, ஆட்சி செய்ய வரப்போகிற ஓதியப்பரிடம் வேண்டிக்கொள்வோம்.

ஓம் ஸ்ரீ ஓதியப்பர், லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

ஓம் நம குமாராயா நமஹ!

சித்தன் அருள்............. தொடரும்!

சித்தன் அருள் - 893 - ஸ்ரீ ஓதியப்பர், ஓதிமலை!

$
0
0

இன்று போகர் பெருமானின் கூற்றின்படி, ஓதியப்பரின் அவதார நட்சத்திரம் (ஆவணி பூசம், திரயோதசி திதி). சித்தன் அருள் 892வது தொகுப்பில் அவரவர் வீட்டில் "கந்த சஷ்டி கவசம்"ஓதி, முருகப்பெருமானுக்கு அர்க்யம் கொடுத்திட வேண்டியிருந்தோம். கிடைத்த தகவலின் படி, ஓதிமலையில், ஆவணி மாதம் இரண்டாவது முறை வருகிற பூசம் நட்சத்திரத்தன்றுதான் அவருக்கு சிறப்பு பூசை செய்யப் போகிறார்களாம்.

அடியேனும், வீட்டிலேயே, அவருக்கு அபிஷேக பூசை செய்து, அர்க்யம் கொடுத்து லோக ஷேமத்துக்காக வேண்டிக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

இத்தருணத்தில், ஓதிமலை சுப்ரமண்யரை தியானித்து, ஓரிரு தகவல்களை நினைவிலிருந்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

ஆன்மீகத்தின் உச்சகட்டமான, சித்த மார்கத்துக்குள் செல்வதற்கு, முதல் படியின் தொடக்கம் இங்குதான், ஓதிமலையில், ஆரம்பிக்கிறது. இங்கே அந்த முதல் விதை கிடைப்பவர்கள் மிகுந்த பாக்கியசாலிகள். ஆம், சித்தமார்கத்துக்குள், வித்யார்த்தியாக யாரை சேர்த்துக் கொள்ளவேண்டும், யாரை விலக்கி விடவேண்டும் என மனித, ஆத்ம என்கிற இரு நிலைகளிலும் வருபவர்களை தெரிவு செய்வதே ஓதியப்பர்தான் என்று சித்த மார்கத்துக்குள் புகுந்து செல்பவர்களுக்கு தெரியும். எப்படி அகத்தியர் கண் படாத எந்த ஒரு வேண்டுதலையும் இறைவன் ஏற்றுக் கொள்வதில்லையோ, அதுபோல் தான் ஓதியப்பர் கண் அசைவு இல்லாமல் போகர் பெருமான் எந்த ஒரு மனிதரையோ, அல்லது ஆத்மாவையோ சித்த மார்கத்த்துக்குள் சேர்த்துக் கொள்வதில்லை என ஒரு கூற்றும் உண்டு.

அபிஷேக நேரத்துக்கு வெட்டிவேர் எண்ணையும், நம்மிடம் ஆழ்ந்த, உண்மையான சரணாகதியும் இருந்தால், நிச்சயம் ஓதியப்பரை குளிரவைக்கலாம், அவரும் உடன் அருளுவார்.

போகர் தவம் செய்த பாறையில் அமர்ந்தால், அத்தனை மென்மையாக, தாமரை ஆசனம் போல் இருக்கும். த்யானம் செய்தால், கேட்கிற கேள்விக்கு நிகழ்ச்சிகளை த்யானத்தில் காட்டி பதில் அருளுவார். கவனம், அங்கு அமரும் பொழுது இயல்பாக சுவாசிக்கவும். மூச்சை பிடித்து கும்பத்தில் நிறுத்தி விடக்கூடாது. இங்கு ஒருவருக்கு விதிக்கப்பட்டிருந்தால் சித்த/இறை தரிசனம் எளிதாக கிட்டும்.

ஒவ்வொரு நிமிடமும் அதிசயமே, அனுபவமே. ஒருமுறை, அவர் பிறந்த நட்சத்திரத்துக்கு அடுத்தநாள். மலையில் தங்கியிருந்து, பின் மதியம் கீழே இறங்க வேண்டிய தருணம். கோவில் பூட்டியிருந்தது. முன் மண்டபம் யாருமின்றி அமைதியாக இருந்ததால், அவருக்கு நமஸ்காரம் செய்து விட்டு அமர்ந்து, வேண்டுதலை வைத்தேன்.

"ஓதியப்பா! அடியேனுக்கும், ஏதேனும் ரூபத்தில் வந்து, எளிய உபதேசம் கொடு!"என்றுவிட்டு த்யானத்தில் சென்று விட்டேன்.

பத்து நிமிடங்கள் அமைதி. எங்கும் நிசப்தம். அருமையாக இருந்தது.

தூரத்திலிருந்து ஏதோ ஒரு ரீங்காரம், அடியேனை நோக்கி வருவது போல், உணர்ந்தேன்.

எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு வண்டு, அடியேனின் வலது காதில் நின்று ரீங்காரம் செய்தது. அந்த சப்தம் பிரணவ மந்திரமாக ஒலித்தது. அடுத்தவினாடியில், தலையை மூன்று முறை சுற்றி வந்து ஒவ்வொரு முறையும் "பிரணவ ரீங்காரத்தை"வலது காதில் வைத்துவிட்டு  எங்கோ நோக்கி பறந்து சென்றது. பின்னர் எங்கும் அமைதி.

த்யானம் கலைந்து, மிகுந்த சந்தோஷத்துடன், ஓதியப்பருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு இறங்கி வந்தோம்.

"ஓதியப்பர் வந்தாரில்லையா?"என்று வினவிய நண்பருக்கு, ஆம்! என்று தலைகுலுக்கி சொல்கிற அளவுக்கு, மனம் ஒன்றிப்போனது என்னவோ, உண்மை.

யாருக்கும் இந்த உபதேசம் கிடைக்கும், இறைவா! உன்னை தவிர வேறு எதுவும் வேண்டாம் என்கிற மனநிலையில் ஒருவர் இருந்துவிட்டால்.

ஓம் ஸ்ரீ ஓதியங்கிரி சுப்ரமண்யாய நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்............... தொடரும்!

சித்தன் அருள் - 894 - தாவர விதி!

$
0
0

வாழையின் நன்மைகள்: பாரம்பரிய உணவுகளில் இன்று வரை இன்றியமையாததாக இருந்து வருவது வாழை மற்றும் வாழை சார்ந்த உணவுகள். நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த வாழை. மறந்து போன நமது பாரம்பரியம் மிக்க வாழையின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

வாழையின் நன்மைகள்

வாழை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு நன்மை தருகிறது. வாழை மரத்தில் உள்ள இலை, பழம், பூ, மற்றும் வாழை தண்டு என அதனுடைய அனைத்து பாகங்களும் நமக்கு மருத்துவ குணங்களை தருகின்றன.

வாழையின் பாகங்கள்
  1. வாழை இலை
  2. வாழைத்தண்டு
  3. வாழைப்பழம்
  4. வாழைப்பூ மற்றும்
  5. வாழைக்காய்

வாழை இலை

வாழை இலை பச்சையம் நிறைந்தது. இரும்பு,  மக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இதனால் வாழை இலையில் உணவை  வைத்து உண்ணுமாறு பரிந்துரைக்கிறது சித்த மருத்துவம். வாழை இலையில் சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும் போது வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது உடம்பில் சேர்கின்றன. மேலும், இதில் பாலிபீனால் இருப்பதால்  நமது உணவுக்கு இயற்கையாகவே கூடுதல் சுவை கிடைக்கிறது. எவர்சில்வர் தட்டுகளைத் தவிர்த்து, தினமும் வாழை  இலையில் உண்ணுவது சிறந்தது.  

வாழைத்தண்டு

நமது உடலில் இருக்கும் உப்பை வெளியேற்றுவதில் வாழைத்தண்டுக்கு நிகரான உணவு எதுவும் இல்லை என்பதே உண்மை. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையாவது வாழைத்தண்டை சாறாகவோ அல்லது பொறியலாகவோ சமைத்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உடலில் தேவையற்ற உப்பை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை. சிறுநீரகத்தில் கற்கள்  வராமல் தடுக்கவும், அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்றவும் இது உதவுகிறது. வாரத்துக்கு நான்கு முறையாவது  வாழைத்தண்டைக் கட்டாயம் சாறாகவோ, பொரியலாகவோ அல்லது அவியலாகவோ சமைத்து உணவில் சேர்த்துக்  கொள்ளவேண்டும். வாழைத்தண்டு சூப்பை கடைகளில் வாங்கிக் குடிப்பதை முடிந்த வரையில் தவிர்ப்பது நல்லது. உப்பு குறைவாக சேர்த்துக் கொண்டு மிளகு  அல்லது சீரகத்தூள் சேர்த்து, வீட்டிலேயே வாழைத்தண்டு சூப் வைத்து அருந்தலாம். உடல் மெலிய விரும்புபவர்கள் நார்ச்சத்து  மிக்க வாழைத் தண்டைச் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பு சேர்க்காமல் வாழைத் தண்டை உணவில்  சேர்த்துக் கொள்ள வேண்டும்.  

வாழைப்பழம்

அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் கொண்டது. உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற சோடியம் உப்பை நீக்கி, உடல் சோர்ந்து  போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான  குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது. குடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாகப்  பயன்படுகிறது. தினமும் காலை எழுந்தவுடன் ஒரு வாழைப்பழம், இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து ஒரு  வாழைப்பழம் சாப்பிட வேண்டும். சிலர் வாழைப் பழத்தை பால், தயிருடன் சேர்த்து மில்க்‌ஷேக் ஆக குடிக்கிறார்கள். இது தவறு.  வாழைப்பழத்தை எந்தப் பொருளுடனும் கலந்து உண்ணக் கூடாது. ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோயாளிகள் தவிர  அனைவருமே வாழைப்பழத்தை தினமும் உண்ணலாம்.  

வாழைப்பூ

வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் மருத்துவ தன்மை உடையது. ஒரு வாரத்திற்கு இரு முறையாவது வாழைப்பூவை அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டும். நாம் உண்ணும் உணவில் சுவையை கொடுப்பதுடன் உடலுக்கு தேவையான சில மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்கிறது. இதில் உயிர்ச்சத்துக்கள் நிறைந்த வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய தாது உப்புகள், நார்ச்சத்துக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளன.

வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதைத் தொடர்ந்து உண்டுவந்தால் மாதவிடாய் காலத்தில்  ஏற்படும் அதிக ரத்தப்போக்கைத் தடுக்கலாம். வாரம் இரு முறையாவது வாழைப்பூவை அனைவரும் கட்டாயம் சாப்பிட  வேண்டும்.  ஆனால் செரிமானக் கோளாறு இருக்கும் போது, வாழைப்பூ உண்பதைத் தவிர்க்க வேண்டும்.  

வாழைக்காய்

வாழைக்காயில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால், சிறிதளவு உணவில் எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். வாழைக்காயை மசித்து சிறிதளவு உப்பு போட்டு வேகவைத்து சூப்பாகவும் அருந்தலாம். வாழைக்காய், மூட்டு வலி இருப்பவர்கள் மற்றும் உடல் பருமனானவர்கள் வாழைக்காயைத் தவிர்க்க வேண்டும்.

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம். இதில், மாவுச்சத்து அதிகம்  இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். வாழைக்காயை மசித்து  சிறிதளவு உப்பு போட்டு வேகவைத்து சூப்பாகவும் அருந்தலாம். வாழைக்காய் வறுவல், வாழைக்காய் சிப்ஸ் போன்றவற்றை மிகக்  குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.  இல்லையெனில் வயிறு மந்தமாகிவிடும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள், மூட்டு வலி  இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள் வாழைக்காயைத் தவிர்க்க வேண்டும்.  

வாழை கல்லீரல் நோய்கள், நிமோனியா, சின்னம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அதில் அதிகளவு கால்சியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. கால்சியச் சத்து அதிகம் தேவையான வளரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இது தேவைப்படுகிறது. 

 வாழை மரத்தின் பெரும்பாலான பகுதிகள் நமக்கு பயனுள்ளவை. பூ, பிஞ்சு, காய் ஆகியவை துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; வெள்ளைபடுதலைக் கட்டுப்படுத்தும். தண்டு நீர், இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்.கட்டை, தண்டு ஆகியவை பித்தத்தைக் கட்டுப்படுத்தும்; சிறுநீரைப் பெருக்கும்.

இலை, பட்டை ஆகியவை குளிர்ச்சியுண்டாக்கும். பழம் உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; மலமிளக்கும்; உடலைப் பலப்படுத்தும். வாழை இலையில் உணவு சாப்பிட உடல் ஆரோக்கியம் பெருகும். இரு ஒரு பாரம்பரியப் பழக்கவழக்கமாகும்.

வாழை மரத்தில் நீள்சதுர வடிவிலான பெரிய இலைகள் தண்டில் சுற்று அமைப்பாக வளர்ந்திருக்கும். இலைக்குருத்து, நீண்டு உருண்டவை. இலைக்காம்புப் பகுதி குறுகிய உறை போன்றது.

பூவடிச் செதில்கள், செங்கருநீலம். மலர்கள் ஒருபால் தன்மையானவை, மஞ்சரிக் கொத்தின் கீழே பெண் மலர்களும், மேலே ஆண் மலர்களும் காணப்படும். காய்கள், பெரிய குலையாக வளர்பவை.

கனி, சதைப்பற்றானது. வாழையில் பல வகைகள் காணப்படுகின்றன. அம்பணம், அரம்பை, கதலி போன்ற மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. தமிழகம் முழுவதும் உணவு உபயோகங்களுக்காகப் பயிர் செய்யப்படுகின்றது.

எச்சரிக்கை

மூட்டுவலி உள்ளவர்கள் வாழைக்காயை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே பல நோய்கள் வருவதைத் தடுக்கலாம். 

வாழைத்தண்டு பொரியல், சாம்பார் செய்து வாரம் இருமுறைகள் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும், சிறுநீரகக் கற்கள் தோன்றாது; சிறுநீர் நன்றாகக் கழியும்.

ஒரு டம்ளர் அளவு வாழைப்பட்டைச் சாற்றைப் பாம்புக்கடி பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாகக் கொடுக்கலாம்.

வாழைப்பழம் இரவில் சாப்பிட்டால் உண்ட உணவு நன்றாகச் செரிமானம் ஆகும்; மலச்சிக்கல் இருக்காது. நோயாளிகளின் உடல் தேற மிகவும் உகந்த பழமாகும்.

வாழை இலைக் குருத்தைத் தீப்புண்கள் மீது கட்ட வேண்டும். கொப்புளங்கள் இருந்தாலும் அவற்றின் மீது வைத்துக் கட்ட அவை மறையும்.

பிஞ்சு வாழைக்காய் கூட்டு செய்து சாப்பிட்டால் உடல் உறுதி அதிகரிக்கும். வயிற்றுப் புண்கள் மாறும். வாரம் ஒரு முறை வாழைக்காய் பொரியல், வறுவல் போன்றவை செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்; உடல் உறுதியாகும்.

துவரம் பருப்புடன் வாழைப்பூசேர்த்து கூட்டுவைத்து சாப்பிட வேண்டும். பித்த நோய்கள் குணமாகும்; இரத்தம் விருத்தியாகும்.

சித்தன் அருள்.................தொடரும்!

சித்தன் அருள் - 895 - 120 வருடங்களுக்கு ஒருமுறை சித்தர்கள் பூசை செய்யும் அக்னீஸ்வரர், அரசண்ணாமலை!

$
0
0

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"வலைப்பூவில் ஐந்து தொகுப்புகளில், அகத்தியர் மைந்தன், 120 வருடங்களுக்கு ஒரு முறை சித்தர்கள் பூசிக்கும் சிவலிங்கத்தை, ஈரோட்டுக்கு அருகில் ஒரு ஊரில் அமைந்துள்ள மலை மேல் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், அர்த்தஜாம பூசையையும் பற்றி விவரித்திருந்தார். அந்த நிகழ்சிகள் விவரிக்கப்பட்ட தொகுப்புக்களின் தொடர்பை கீழே தருகிறேன். ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் பாருங்கள்.

"இந்தக் கோவிலில் நூற்றி இருபது வருஷத்திற்கு ஒருமுறை தலையாயச் சித்தர் என் தலைமையில் பதினெட்டுச் சித்தர்கள், நள்ளிரவு நேரத்தில் இந்த சிவபெருமானுக்கு ஒன்று சேர்ந்து அபிஷேகம் செய்வது உண்டு.  எனது மைந்தன் என்பதால் உனக்கும் இந்தக் கண் கொள்ளாக் காட்சியைக் காட்ட இக்கோவிலுக்கு வரவழைத்தேன்,  எங்களைக் காண முடியாது என்றாலும் சூட்சுமமாக இந்த உணர்வினைத் தெரிய வைத்தேன்.  இது இன்று மாத்திரமல்ல, இன்னும் இரண்டு நாளைக்குத் தொடரும்.  உனக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கும். எனினும் இதை இப்போது யாரிடமும் சொல்வதில் பயனில்லை.  பொறுத்திரு"என்றார் அகஸ்தியர்.

சித்தன் அருள் தொகுப்பு - 74 - 75 - 76 - 77 - 78 - 79

சமீபத்தில், ஒரு அகத்தியர் அடியவர், சித்தன் அருள் வாசகர் திரு தீபன், சூரத், குஜராத் அவர்கள், அந்த கோவிலை பற்றிய தகவலை அடியேனுடன் பகிர்ந்து கொண்டார். அவர் அனுமதியுடன், தகவல்கள் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

"சட்டென்று ஏகுக"எனத் தொடங்கிய அவரின் அனுபவம், வாசிப்பவரை மூச்சு விடக்கூட விடாமல் அடுத்தது என்ன அனுபவத்தை அகத்திய பெருமான் அவருக்கு கொடுத்திருக்கிறாரோ என வாசிப்பவரை திகைக்க வைத்த நிகழ்ச்சிகளை படித்துவிட்டு, பலரும், இன்றும், அது எந்தமலை? எங்கிருக்கிறது? எப்படி செல்வது? அந்த மலையில் இரவில் ஆபத்தான சூழ்நிலை விலகிவிட்டதா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தனர். அனைத்திற்குமான பதிலை கீழே தருகிறேன்.

இந்தக் கோயில் பெருந்துறை-விஜயமங்கலம் நான்கு வழிச்சாலையில் கொங்கன்பாளையத்தில் "அரசண்ணாமலை"மேல் அமைந்துள்ளது. கிராமத்து மக்கள் வருடந்தோறும் விழா எடுத்து நடத்தி வருகின்றனர். பக்கத்தில் உள்ள விஜய மங்கலத்தில் சமண சமயத்தை அவரின் படுகைகள் குன்றுகள் சிகிலமடைந்த கோயில்கள் இருக்கின்றன. அவை மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

கிராமத்து மக்களால், அக்னீஸ்வரர் கோயில் தேவஸ்தான டிரஸ்ட் ஒன்றும் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது.

மாதம் மாதம், கிராமத்து மக்கள் கிரிவலம் செய்து வருகின்றனர். விழாவும் எடுத்து வருகின்றனர். அந்த கோயில் தொடர்பான செய்திகளுக்கு அவர்கள் காணொளியில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டால் மேலும் விவரங்கள் கிட்டும் என்று நினைக்கிறேன்.

கோயிலுக்கு, இன்று வரை, சென்று வர மலைப்பாதைகள் சரியாக இல்லை மிகவும் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது.

இன்றும் இரவில் யாரையும் மலைமேல் தங்குவதற்கு அனுமதிப்பதில்லை. அந்த காலத்தில் இருந்த ஆபத்துகள் இன்று தொடர்வதாக கிராமத்து மக்கள் கூறுகின்றனர். தனியாக யாரும் மலை ஏறி செல்வதில்லை. குழுவாகவே செல்ல வேண்டும். இரவு நேரத்தில் மலை ஏறுவதையும் தவிர்க்க வேண்டும்.

இந்த மலை சம்பந்தமாக கிடைத்த புகைப்படங்களையும், ஒரு காணொளியையும் கீழே தருகிறேன்.

இந்த தொகுப்பை படித்துவிட்டு, உடனேயே மலை ஏறி சென்று விடாதீர்கள். எந்த ஆபத்தான விஷயங்களிலும் ஈடுபடவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.


















ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்....................தொடரும்!

சித்தன் அருள் -896 - தாவர விதி!

$
0
0

இன்று தாவர விதி என்கிற தொகுப்பில், மாவிலையின் மருத்துவ குணங்களை சித்த மருத்துவமும், ஆயுர்வேத மருத்துவமும் கூறுவதை பார்ப்போம்.

மாவிலையை, மங்கலத்தின் சின்னமாக சித்தர்கள் கூறுகின்றனர். அனைத்து தெய்வீக விஷயங்களிலும், பூசையிலும் இது முக்கிய பங்கு வகிக்கின்றது. வேப்பிலை போல இதுவும் தான் இருக்கும் சூழ்நிலையை எல்லா விதத்திலும் சுத்தம் செய்கிறது. கோவில்களில், வீடுகளில், கலச பூசைக்கு மிக முக்கியமாக உபயோகிக்கப்படுகிற ஒரு இலையாகவும் உள்ளது.  மா இலை சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.
  1. கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். 
  2. தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.  
  3. மாமரத்தின் இலைகளை எரித்து, அதன் சாம்பலுடன் பசு வெண்ணெய் சேர்த்துத் தீப்புண் மீது தடவினால், வலி உடனடியாகக் குறையும்.
  4. கொழுந்து இலைகளை சிறு துண்டுகளாக வெட்டி, தேன் சேர்த்து மென்று சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, குரல் கம்மல் நீங்கிவிடும்.
  5. இலைக்காம்பை ஒடித்தால் வரும் பாலை பித்த வெடிப்பின் மீது தடவினால் சரியாகும்.
  6. மாவிலைச் சாறுடன் பொன்னாங்கண்ணிச் சாறு, தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்குத் தேய்த்து வந்தால், இளநரை, முடி கொட்டுதல் பிரச்னைகள் தீரும்.
  7. பழுப்பு நிறமுள்ள கொழுந்துகளை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி, ஒவ்வொரு வேளையும் சாப்பாட்டுக்கு முன் அரை தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும்.மாங்கொட்டை பருப்பை எடுத்து காயவைத்து பொடித்து கஷாயம் செய்து மாதவிலக்குக் காலத்தில் அருந்தினால், அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். வெள்ளைப்படுதல் குணமாகும். வயிற்றுப் புழுக்கள் நீங்கி, வயிற்றுப்புண் ஆறும். வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு குணமாகும். மாம்பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.
  8. மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் அணுகாது. மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்  
சர்க்கரை நோய்:-

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு மா இலை ஒரு மிகச்சிறந்த மருந்தாகும். மா இலையின் கொழுந்து இலைகளில் டானின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது ஆரம்பகால சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகும். இந்த இலைகளை காயவைத்து பொடியாக்கி தேநீர் தயாரித்து குடிக்கலாம், அல்லது இரவு முழுவதும் இலைகளை நீரில் ஊற வைத்து காலையில் அதனை வடிகட்டி குடித்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் வரும். மேலும் இது ஹைபர்கிளேசிமியாவை குணப்படுத்துவதிலும் பயன்படுகிறது.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது:-

மா இலையில் இரத்த அழுத்தத்தை குறைக்கும் ஹைப்போடென்சிவ் குணங்கள் உள்ளது. இவை இரத்த நாளங்களை வலிமைப்படுத்தி வெரிகோஸ் நோயை குணப்படுத்துகிறது. கொழுந்து இலைகளை உங்கள் உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தாலே போதும் உங்கள் உயர் இரத்த அழுத்தம் தானாக குறையும். மா இலையில் இரத்த அழுத்தத்தை குறைக்கும் ஹைப்போடென்சிவ் குணங்கள் உள்ளது.இவை இரத்த நாளங்களை வலிமைப்படுத்தி வெரிகோஸ் நோயை குணப்படுத்துகிறது.

ஓய்வின்மை:-

பதட்டத்தால் அமைதியற்று சிரமப்படுபவர்களுக்கு மா இலை ஒரு மிகச்சிறந்த வீட்டு மருந்தாகும்.

நீங்கள் குளிக்கும் நீரில் சில மா இலைகளை போட்டு ஊறவைத்து பின்னர் குளியுங்கள். இது உங்கள் பதட்டத்தை போக்கி உங்களை புத்துணர்ச்சியாக உணர செய்யும். அதனால்தான் கோவில்களில் தீர்த்தங்கள் மா இலை மூலம் வழங்கப்படுகிறது.

சிறுநீரக கற்கள்:-

மா இலைகள் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களை கரைக்க கூடியது. தினமும் மா இலை பொடியை நீரில் கரைத்து இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் விரைவில் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற்றப்படும்.

சுவாச பிரச்சினைகள்:-

அனைத்து விதமான சுவாச பிரச்சினைகளுக்கும் மா இலைகள் சிறந்த தீர்வாக இருக்கிறது. குறிப்பாக சளி மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்க பட்டவர்களுக்கு இது மிகச்சிறந்த வீட்டு மருந்தாகும். மா இலையை கொதிக்க வைத்து அதில் தேன் சேர்த்து கசாயமாக குடித்தால் சில நிமிடங்களில் இருமல் குணமாகும். மேலும் இது குரல் இழப்பையும் சரி செய்யும்.

வயிற்றுப்போக்கு:-

வயிற்றுப்போக்கை உடனடியாக குணப்படுத்த மா இலையை பயன்படுத்தலாம். மா இலையை நிழலில் காயவைத்து பொடியாக்கி அதனை நீரில் கலந்து தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குடித்தால் வயிற்றுப்போக்கு உடனடியாக குணமடையும்.
   
காது வலி:-

காது வலி என்பது அதிக வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்த கூடிய ஒரு வலியாகும். வீட்டு மருத்துவமான மா இலை இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும். மா இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சாறு சிறந்த காது மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் வேலை செய்யும். இந்த சாறை பயன்படுத்துவதற்கு முன் சிறிது சூடுபடுத்தவும்.

காயங்களை குணப்படுத்தும்:-

காயம் ஏற்பட்டு அந்த இடம் எரிந்தால் அதற்கு மா இலை எளிய நிவாரணத்தை வழங்கும். மா இலையை எரித்து அந்த சாம்பலை காயம் பட்ட இடங்களிலும், எரியும் இடங்களிலும் பூசினால் போதும். இது எரிச்சலை உடனடியாக கட்டுப்படுத்தி காயத்தை குணப்படுத்த தொடங்கும்.

விக்கல்:-

உங்களுக்கு தொடர்ந்து விக்கல் எடுத்தாலோ அல்லது வேறு ஏதேனும் தொண்டை பிரச்சினை ஏற்பட்டாலோ அதனை குணப்படுத்த மா இலை சரியான வீட்டு மருந்தாகும். சில மா இலைகளை கொளுத்தி அந்த புகையை சுவாசிக்கவும். இது உடனடியாக உங்கள் விக்கலை நிறுத்துவதோடு தொண்டை பிரச்சினைகளையும் சரிசெய்கிறது.

குடலுக்கு நல்லது:-

சூடான நீரில் சில மா இலைகளை போடவும், பின்னர் இதனை மூடி வைத்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். அடுத்தநாள் காலை இதனை வடிகட்டி இந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை தொடர்ச்சியாக செய்து வரும்போது உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உங்கள் வயிறு எப்பொழுதும் சுத்தமாக இருக்கும்

சித்தன் அருள்............... தொடரும்!

சித்தன் அருள் - 897 - ஆலயங்களும் விநோதமும்!

$
0
0

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நம் பாரத தேசம், அளவிட முடியாத சக்தி/ஆச்சரியங்கள் நிறைந்த பூமி. அதனால் தான் உலகில் எங்கு தோன்றி வாழ்ந்ததை விட, இங்கு தோன்றி, நம்மிடை மனிதனாக வாழ்ந்த சித்தர்களும்/ஞானிகளும் ஏராளம். ஆம்! தேனிருக்கும் பூவென, இறைவனே இங்கு குடி கொண்டுள்ளதால், தேனீயாக சித்தர்களும்/மகான்களும் இங்கு தோன்றி வருகின்றனர்.

பல வருடங்களுக்கு முன்னால், நம் பாரத தேசத்தில் உள்ள கோவில்களில், தொடர்ந்து பின்பற்றப் படும், வித்யாசமான பூஜை, நேர்த்திக்கடன், வழிபாடுகள் பற்றி ஒரு ஆராய்ச்சி அடியேன் செய்ததுண்டு. வினோத முறைகளின் பின்புலம் பற்றி அதிகம் விரிவாக தெரியவில்லை எனினும், இன்றும் தொடர்ந்து பின்பற்றக் கூடிய முறைகளை பற்றியும், அந்த கோவில்கள் பற்றியும் அகத்தியப் பெருமானின் சித்தன் அருளில், தினமும் ஒரு கோவில் என உங்களுக்கு தெரிவிக்கலாமா என்று ஒரு யோசனை வந்தது.

இதில் உங்கள் எண்ணத்தையும் தெரிவியுங்களேன்!

எல்லாம் குருநாதர் செயல்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்..................... தொடரும்!

சித்தன் அருள் - 898 - ஆலயங்களும் விநோதமும் - காசி விஸ்வநாதர், காசி!

$
0
0

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று ஆவணி திருவோணம். நம் குருநாதர் திருவோண நட்சத்திரத்தன்று செய்யச் சொன்ன பிரார்த்தனையை செய்துவிட்டீர்களா.

"ஆலயங்களும் விநோதமும்"என்கிற தலைப்பில், நம் பாரத தேசத்தில் உள்ள கோவில்களில் தொடர்ந்து பின்பற்றக்கூடிய வித்யாசமான பூசை முறை, வழிபாடு போன்றவற்றை ஒரு தொகுப்பாக தரலாம் எனத்தோன்றியது. இதை, தினமும், ஒரு கோவிலின் தகவல் என்று தர வேண்டும் என்று விருப்பம். ஆயினும் நம் குருநாதர் என்ன தீர்மானித்திருக்கிறாரோ அதன் படி நடக்கும், என்ற நம்பிக்கை அடியேனுக்கு உண்டு.

இந்த தலைப்பில் வரும் விஷயங்களை பொக்கிஷமாக கருதி, அந்த கோவில்களுக்கு செல்ல நேர்ந்தால், அந்த அருளை மறக்காமல் பெற்றுக்கொள்ளும்படி, வேண்டுகிறேன்.

முதல் கோவிலாக, காசி விஸ்வநாதர் கோவில், காசி!

தினமும், மாலை வேளை பூஜையின் பொழுது, இறைவன் காசி விஸ்வநாதர் ஸ்வாமிக்கு, 108 வில்வ தளங்களால், அர்ச்சனை செய்யப்படும். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்படும். இதில் விசேஷம் என்னவென்றால், அந்த "108"வில்வதளங்களில் மட்டும், சந்தனத்தினால் "ராமா"என்று எழுதப்பட்டு இருக்கும்.

எல்லோரும் காசி விஸ்வநாதரை தரிசித்து அருள் பெரும்பொழுது, இறைவி அவரிடம், "அடியாள் எப்படி பூசை செய்தால் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்?"என வினவ, சிவபெருமான், "மாலை வேளையில்", நித்ய பிரதோஷம் முடிந்தபின் 108 வில்வ தளங்களில் சந்தனத்தால் ராமா என்று எழுதி, பூசை செய்தால், அதை யாம் ஏற்றுக்கொள்வோம்"என உத்தரவு கொடுக்க, அம்மையும் அவ்வாறே பூஜை செய்ததாக காசி புராணம் கூறுகிறது.

அதுவே, இன்றும் தொடர்ந்து வருகிறது.

சரி! இங்கு நம் ஞாபகத்தில் இருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், காசிக்கு சென்று எதை விட்டோம் என்பதல்ல, இறைவன் ஏற்றுக்கொண்டு அருள் பாலிக்கும் அந்த வில்வதளம் ஒன்றை பிரசாதமாக பெற்று வந்து வீட்டில் வைத்தால், இறைவனே நம்முடன் என்றும் உறைவார். காசியின் கங்கை தீர்த்தத்திற்கும், 108 வில்வதளங்களில் ஒன்று பிரசாதமாக கிடைக்கவும், பிரார்த்தனை செய்யுங்கள்.

இவைகளை விஞ்சியது இவ்வுலகில் இல்லை!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...................... தொடரும்!

சித்தன் அருள் - 899 - ஆலயங்களும் விநோதமும் - வேங்கடவர் கோவில், திருப்பதி!

$
0
0

திருப்பதி வேங்கடவர் கோவில், வைணவ தலங்களில் முதன்மையாக கருதப்படுகிற ஒன்று. இறைவனே சுயம்புவாக அவதாரம் எடுத்ததாக அகத்தியப் பெருமானே நாடியில் வந்து கூறியதை, "பெருமாளும் அடியேனும்"என்கிற தொகுப்பில் படித்தது நினைவில் இருக்குமே! நிறைய அதிசயங்களும், ஆச்சரியங்களும், மர்மமும் நிறைந்த இடம். சுருக்கமாக சொல்வதென்றால், எந்த ஒரு ஜீவனையும் மயக்கி, சுருட்டி தன் காலடியில் போட்டுக்கொள்ளும் இறையாற்றல் நிரம்பி வழியும் இடம்.

இந்த கோவிலின் புராண கால விதி முறைப்படி, வேங்கடவர் வாரத்தில் ஒருநாள், கோவிலை விட்டு மலை இறங்கி, கீழே இருக்கும் அலமேலுமங்காபுரத்தில் உறையும் தாயாரை பார்க்க செல்வதாக ஐதீகம். இதற்கு ஏற்றாற்போல், மலைமேல் சுவாமி சன்னதியில், பூஜை முறையே அந்த ஒருநாள் மாறிவிடும். எப்படி? எந்தநாளில்?

வியாழக்கிழமை இரவு நடுநிசியில் , இரவு 12.00 மணிக்கு, வேங்கடவரின் மொத்த அலங்காரமும் கலைக்கப்பட்டு, அவருக்கு ஒரு வேஷ்டி/அங்கவஸ்திரம், வில்வமாலை மட்டும் சார்த்தப்பட்டு, சிவனுக்குரிய மந்திரங்கள் ஓதப்பட்டு, விபூதியில் (திருநீறில்) கற்பூர ஆரத்தி எடுத்து, அந்த விக்கிரகத்தை "சங்கரநாராயணராக"மாற்றிவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பக்தர்களுக்கு மட்டும் தான் இந்த பூஜையை பார்க்க முடியும். முன்பதிவு செய்ய வேண்டும்.

பெருமாள் இறங்கி சென்ற இடத்தில் சிவபெருமான் சங்கரநாராயணராக வந்தமர்கிறார். வெள்ளியன்று எளிய அலங்காரத்துடன் சுவாமி நிலையில் தரிசனம் தர இதுதான் காரணம். கீழே அலமேலுமங்காபுரத்தில் தாயாருடன் சேர்ந்தமர்ந்து, அங்கு வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆதலால், அங்கு அத்தனை கூட்டம் கூடும்.

வெள்ளிக்கிழமை இரவு அதே 12 மணிக்கு மறுபடியும் இறைவன் திருமேனிக்கு அலங்காரம் செய்து, மந்திர பூஜையால், அந்த விக்கிரகத்தை சங்கரநாராயணரிலிருந்து "வேங்கடவராக"மாற்றி விடுகின்றனர். கீழே தாயாருடன் இருந்து அருள்பாலித்து வந்த சந்தோஷத்தால், மலையில் சனிக்கிழமை அன்று தன்னை காண வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதல்களை உடனேயே அருள்கிறார். இதையறிந்து மக்கள் கூட்டம் சனிக்கிழமை அன்று அவர் தரிசனத்துக்கு மலைமேல் திரள்கிறது.

சரி! இங்கு நாம் என்ன வேண்டிக் கொள்ள வேண்டும்?

"ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பக்தர்களுக்கு மட்டும் தான் இந்த பூஜையை பார்க்க முடியும். முன்பதிவு செய்ய வேண்டும்" - அதில் ஒருவராக நான் இருக்கவேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள். ஏன் என்றால், அந்த பூஜையை பார்ப்பவர்களுக்கு மட்டும், தீபாராதனை காட்டின விபூதி சிறிதளவு, பிரசாதமாக கொடுக்கப்படும்.

அந்த விபூதி மிகப்பெரிய பொக்கிஷம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்......................... தொடரும்!

சித்தன் அருள் - 900 - ஆலயங்களும் விநோதமும் - மகாதேவர் கோவில், வைக்கம், கோட்டயம், கேரள மாநிலம்!

$
0
0

​ஸ்ரீ பரசுராமர் தமது யோக சக்தியால் ஆகாய வழியாக வடதிசை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது, கருடன் கத்தியது. அவரது வலது தோள்பட்டை சிலிர்த்தது. அந்த நல்ல சகுனத்தின் அடையாளமாக அவர் கீழே பார்த்தார். நாவல் பழ நிறமுள்ள ஒரு சிவலிங்கம் நீரில் பாதியளவு மூழ்கியிருப்பது தெரிந்தது. அக்கணமே, அவ்விடத்தில் இறங்கி, அங்கிருந்த சிவலிங்கத்தை எடுத்துக் கட்டித்தழுவி, பீடம் ஒன்றை அமைத்து, அதில் சாஸ்திர முறைப்படி பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்தார். இந்த ​​விபரம் வைக்கம் தலபுராணத்திற்கு அடிப்படையான பார்க்கவ புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவபெருமான், பக்தனான கரன் எனும் அசுரனிடம் தனது அம்சமான மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து விட்டார். அவனுடன் ஸ்ரீ வியாக்ரபாத முனிவரையும் அனுப்பி வைத்தார். அவரும் கரனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்தார். மூன்று சிவலிங்கங்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்ட கரன், களைப்பின் மிகுதியால் ஓரிடத்தில் சற்று ஒய்வு பெறுவதற்காக தன் வலக்கையில் வைத்திருந்த சிவலிங்கத்தைக் கிழே வைத்தான். சிவலிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்ற போது அது முடியாமல் போனது. அதை எடுக்க முயன்று தோல்வியடைந்த கரன், திரும்பிப் பார்த்த போது வியாக்ரபாரத முனிவர் நின்று கொண்டிருந்தார். உடனே அவன் அவரிடம் சிவலிங்கத்தைப் பூசை செய்து வரும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அங்கேயே தங்கி விட்டார். எனவே வைக்கத்திற்கு வியாக்ரபாதபுரம், வியாக்ரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது. ஸ்ரீ வியாக்ரபாதர் பூசை செய்த வைக்கத்தப்பனுக்கு வியாக்ரபுரீசுவரர் என்ற பெயரும் உண்டாயிற்று. இக்கோயிலில் வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில், ஒரு சமயம் மகாதேவர் ஸ்ரீ வியாக்ரபாதருக்குத் தரிசனம் தந்தாராம். தற்போது அங்கு ஆலமரத்தோடு கூடிய ஒரு மேடையிருக்கிறது. அம்மேடையை "வியாக்ரபாதர் மேடை"என்று அழைக்கிறார்கள்.

​ஆதரவற்ற, ஏழை பிராமணர் ஒருவர் இங்கு வாழ்ந்து வந்தார். ஒருநாள், அவர் வீட்டுக்கு முன் அமர்ந்திருக்கையில், இன்னொரு பிராமணர் வந்து, "நான் இங்கே அமர்ந்து சிறிது நேரம் ஜபம் செய்ய அனுமதிக்க வேண்டும்"என கேட்டுக்கொண்டார். வந்தவரை அனுமதித்து , அவர் ஜபம் முடிந்தபின், தன் இயலாமையை, ஆதரவற்ற ஏழ்மையை கூறி மனம் திறந்துள்ளார். அதற்கு வந்தவர் "நீ உடனேயே போய், திருவிதாம்கூர் மகாராஜாவை பார்! வழி கிடைக்கும்"என்றுரைத்து கிளம்பி சென்றார்.

இவரும் வந்தவர் சொன்னார் என்பதற்காக, மறுநாள், நம்பிக்கையின்றி மகாராஜாவை போய் பார்க்க, மிகுந்த மரியாதைகளுடன் இவரை ராஜா உபசரித்து வரவேற்றார். முதல்நாள் இரவில், மகாராஜாவின் கனவில் தோன்றிய இறைவன் "என் வைக்கம் கோவிலில், "கட்டியம்"கூறப்படுவதில்லை. ஆகவே, நாளை ஒரு பிராமணர் உன்னை பார்க்க வருவார். அவரிடம் 5 அடிஉயர மரத்தடியில், வெள்ளி பதிக்கப்பெற்று, அதன் மேல் நந்தி தேவர் அமர்ந்திருக்கும் நிலையில் உருவாக்கி அவரிடம் கொடுத்து, தினமும் நடக்கும் "அத்தாழ பலிபூஜையின்"பொழுது, அவரை, அந்த தடியில் இருக்கும் நந்தி தேவர் என்னை பார்த்திருக்கும் நிலையில், இவர் கண்ணை மூடிக்கொண்டு கோவிலை நான்கு முறை மந்திர ஜெபம் செய்து நடந்து வரச்சொல்"என உத்தரவு வந்தது. மஹாராஜாவும், இறைவன் உத்தரவை சிரம் மேற்கொண்டு செய்து, வந்தவருக்கு மாதாமாதம் சம்பளமும் கொடுக்க உத்தரவிட்டார்.

இன்றும், தினமும் இரவில் நடக்கும் பூசையின் பொழுது, உலாவரும் இறைவனை பார்த்து கண்ணை மூடியபடி நடந்து, தோளில் அந்த 5 அடிஉயர நந்திதேவர் பதித்த வெள்ளித்தடியை சுமந்தபடி, ஒருவர் மந்திர ஜபம் செய்தபடி வருகிறார். இறைவன் உத்தரவால் உருவாக்கப்பட்ட அந்த வெள்ளித்தடியை காண்பதே இவ்வாழ்வின் பெரும் பாக்கியம்.

இரவு நடைபெறும் பூஜையை "அத்தாழ பூஜை"என்பார். இந்த பூஜை முடிவுறும் தருவாயில், பூஜாரி வெளியே வந்து "அத்தாழம் கழிக்கான் ஆரெங்கிலும் உண்டோ?"என் சத்தமாக கேட்பார். "இன்னும் இரவு சாப்பாடு சாப்பிட யாரவது இருக்கிறீர்களா?"என்பதே இதன் பொருள்.

பூஜையில் கலந்து கொள்ளும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, அமைதியாக நிற்பர். பூஜாரி உள்ளே சென்று இறைவன் முன்னின்று "அத்தாழம் கழிக்கான் ஆரும் இல்லா!"என சிவபெருமானிடம் உரைத்துவிட்டு, சந்நிதானத்தை மூடிவிடுவார். அன்றைய தினம் நிறைவு பெரும்.

இன்றுவரை, ஒருவர் கூட பூஜாரி கேட்கும் பொழுது, "நான் இருக்கிறேன்"என்று கூறியதில்லை. ஏன் எனில், அப்படி யாராவது கூறினால், உடன் கோவில் முழுவதும் சுத்தம் செய்து, பூசைகளை மறுபடியும் ஆரம்பித்து, "உள்ளேன் அய்யா"என்று சொன்னவருக்கு உணவளித்து, மறுபடியும் பலிபூஜை செய்து, மறுபடியும் "அத்தாழம் கழிக்கான் ஆரெங்கிலும் உண்டோ?"என கேட்டு யாரும் இல்லை என்றால்தான் கோவில் நடையை சார்த்தலாம். இது இறைவன் உத்தரவு.

சரி! இங்கு நமக்கு என்ன உள்ளது? அத்தாழ பூஜையை அமைதியாக நின்று தரிசித்து, பலிபூஜையின் பொழுது, அந்த வெள்ளித்தடியை சுமந்தபடி ஒருவர் மந்திரம் ஜெபித்து செல்வதை கண்குளிர காண்பதே, மிகப் பெரிய பாக்கியம்!

 ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்..................... தொடரும்!

சித்தன் அருள் - 901 - கிருஷ்ணர் கோவில், அம்பலப்புழை, கேரள மாநிலம்!

$
0
0

பிரளய கால முடிவில், தற்போது குருவாயூரில் பிரதிஷ்டை செய்துள்ள விக்கிரகம், முதலில் கரை சேர்ந்த இடம், அம்பலப்புழை என்பர். பின்னர் அந்நியர் படையெடுப்பிலிருந்து குருவாயூரப்பன் விக்கிரகத்தை காப்பாற்ற, குருவாயூரிலிருந்து, அம்பலப்புழையில் கொண்டு வந்து மறைத்து வைத்ததாகவும் தகவல் உள்ளது. அம்பலப்புழை = அம்பலம் (கோவில்) + புழை (ஆறு). மிகுந்த நீர் வளம் நிறைந்த பூமி. 

எப்படியாயினும், அம்பலப்புழை என்பது, பகவான் கிருஷ்ணர் சிறு குழந்தையாக ஓடி விளையாடிய இடம். இங்கு கிருஷ்ணரை, உண்ணிக்கிருஷ்ணன்/உண்ணிக்கண்ணன் என்றழைப்பர். சிறு குழந்தை என்பதே இதன் அர்த்தம். கிஷ்ணர் ஓடி விளையாடின இடமாதலால், இன்றும் அந்த அதிர்வலையை உணர முடியும். மிக உயரமான அரசமரம் அவர் சுற்றி ஓடி விளையாடி அவர் கரம் பட்டது. ஒவ்வொரு சிறு கல்லும், கிருஷ்ணர் பாதம் பட்டது. கிளிப்பாட்டு என்கிற முறையில், ராமாயணமும், மகாபாரதமும் இங்குதான் இயற்றப்பட்டது. அனைத்து உபசாரங்களுடன் நித்ய பூஜையை பகவான் கிருஷ்ணர் இன்றும் ஏற்றுக்கொள்கிற இடம். தென்றலாக, வேகமாக கோவில் பிரகாரத்தில் காற்றடித்தால், நடந்து செல்கிற பக்தர் கூட, நின்று விடுவார். பகவான் ஓடி விளையாடுகிற பொழுது வெளிவிடுகிற மூச்சு காற்று எனவும், அவர் விளையாட்டுக்கு நாம் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்கிற ஒரு எண்ணமும்தான் காரணம்.

இங்கு இறைவனுக்கு, அரிசியை பாலில் வேகவைத்து, பாயாசமாக நிவேதிக்கிறார்கள். "அம்பலப்புழை பாயாசம்"உலகில் முதன்மையானது, அத்தனை ருசியானது. ஏன் என்றால், அது இறைவன் ஏற்றுக்கொண்டு பிரசாதமாக திருப்பி தருவதினால். வேறு எங்கும் இதுபோல் கிடைக்காது. பக்தர்களுக்கு முன்பதிவின் பேரில், இந்த பாயாசம், நிவேதனத்துக்குப் பின் கிடைக்கிறது.

நித்ய பூஜையின் முடிவில், பூஜாரி வெளியே வந்து மூன்று முறை "வாசுதேவோ"என கூவி அழைப்பார். கிருஷ்ணரை சிறு குழந்தையாக பாவித்து பூஜைகள் செய்வதால், மாலையில் அவர் விளையாட சென்றுவிடுவதாகவும், இரவில், அவரை கோவிலுக்குள் அழைக்கும் விதமாக, எந்த பக்கம் சென்றிருந்தாலும்,"உள்ளே வா  போதும் விளையாடியது! இருட்டி விட்டது"என்கிற தாயின்  மனோபாவத்துடன் பூஜாரி அழைப்பார். அடியவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
 
சரி! இங்கு நமக்கு என்ன செய்தி?

ஒருமுறை இந்த கோவிலுக்கு சென்று, உண்ணிகிருஷ்ணன் ஓடி விளையாடி அவன் பாதம், கைபட்ட இடங்களை எல்லாம், உணர வேண்டும். ஒரு முறை கோவில் பிரகாரத்தில் சுற்றி வந்தாலே போதும். நல்ல அனுபவங்கள், அதிர்வலைகள் கிடைக்கும்! இறைவனை நமக்கு தாங்கும் விதமாக, குழந்தையாக உணரலாம். இன்றும், அவன் தரிசனம்/அருள், எல்லாவற்றிற்கும் மேலாக அவன் கர ஸ்பரிசம் பட்ட அதிர்வலைகளை உணர்பவர்கள், ஏராளம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............. தொடரும்!

சித்தன் அருள் - 902 - ஆலயங்களும் விநோதமும் - ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், குருவாயூர், திருசிவப்பேரூர், கேரள மாநிலம்!

$
0
0

இறைவன் கிருஷ்ணரின் சுவர்க்க ஆரோஹணத்திற்கான நேரம் நெருங்க நெருங்க (வைகுண்டத்திற்கு செல்வது), அவரது முதன்மை பக்தரான உத்தவர் அவரை மனதில் நினைத்து, உருகி மிகவும் வருத்தம் அடைந்தார். அப்பொழுது இறைவனும் அவரைப்பார்த்து இரங்கி உத்தவரிடம் இந்த விக்ரஹத்தை அளித்ததோடு மட்டும் அல்லாமல், தேவர்களின் குருவாகத் திகழ்ந்த பிரஹஸ்பதியிடம் இந்த விக்ரஹத்தை ஒரு நல்ல இடத்தில் பிரதிஷ்டை செய்யும் படி உத்தரவிட்டார். உத்தவர் அவருடைய மறைவிற்குப் பிறகு கலி யுகத்தில் உலகத்தில் உள்ள ஜீவராசிகளுக்கு ஏற்படப்போகும் கஷ்ட நஷ்டங்களை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அதற்கு இறைவன் அவரே இந்த விகரஹத்தில் உறையப்போவதாகவும், மேலும் அவரிடம் தஞ்சம் புகும் பக்தர்களுக்கு அவர் ஆசிகள் வழங்கி அனுக்கிரஹிக்கப் போவதாகவும் சொல்லி உத்தவரை சமாதானப்படுத்தினார்.

துவாரகையைத் தாக்கிய ஒரு பெரிய பிரளயத்தில் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்த விக்ரஹத்தை குரு அவருடைய முதன்மை சிஷ்யனான வாயுவின் உதவியுடன் மீட்டெடுத்தார். குரு மற்றும் வாயு ஒரு நல்ல இடத்தை தேடி உலகெங்கும் சுற்றி அலைந்தார்கள். இறுதியில் அவர்கள் பாலக்காடை அடைந்தார்கள்.  அங்கே அவர்கள் பரசுராமரை சந்தித்தார்கள், பரசுராமர் அவர்கள் கொண்டுவந்த விக்ரஹத்தை தேடிக்கொண்டு த்வாரகாவிற்கு செல்வதாக இருந்தார். பரசுராமர் குரு மற்றும் வாயு தேவர்களை, மிகவும் அழகான பச்சைப்பசேல் என்று விளங்கும் இடத்திற்கு அழைத்து சென்றார், அங்கே காணப்பட்ட அழகான தாமரை தடாகத்தில் இறைவன் பரமசிவர் வசிப்பது போன்ற உள்ளுணர்வை அவர்கள் அடைந்தார்கள். அங்கே இறைவனான பரமசிவன் தனது மனைவி பார்வதியுடன் அவர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் அவர்களை வரவேற்று அந்த விக்ரஹத்தை ஸ்தாபனம் செய்வதற்கு அதுவே உகந்த இடமாகும் என்பதையும் தெரிவித்தார். பரமசிவர் குரு மற்றும் வாயு தேவர்களை அந்த இடத்தை தூய்மைப்படுத்துவதற்கான சடங்குகளை தொடங்கி நடத்த அனுமதி வழங்கினார். மேலும் அவர்கள் இருவரும் இணைந்து விக்ரஹத்தை நிறுவியதால் (அதாவது குருவும் வாயுவும் இணைந்து செயல் புரிந்ததால்) அன்றிலிருந்து அவ்விடம் குருவாயூர் என்ற வழங்கப்படும் என்று ஆசீர்வதித்தார். அதற்குப் பிறகு பரமசிவர் மற்றும் பார்வதி இருவரும் எதிர்க்கரையில் இருந்த மம்மியூருக்கு திரும்பி சென்று விட்டனர்.

சிவபெருமான் அனுமதித்து, தேர்ந்தெடுத்த இடத்தில், குருவாயூரப்பனுக்கு கோவில் கட்டப்பட்டது.

கேரள நாடு பெருமாள் என்ற வம்சத்தினரின் ஆட்சியின் கீழ் வந்த பொழுது, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலின் நிலைமை மேலும் மோசமடைந்தது மற்றும் மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டது. பெருமாள் வம்சத்தவர் மிக்கவாறும் சைவர்கள் ஆவார் மேலும் அதனால் அவர்கள் வைஷ்ணர்களின் கோவில்களில் அத்தனை அக்கறை காட்டவில்லை. அவர்களுடைய காலத்தில் மம்மியூரில் இருந்த சிவன் கோவிலுக்கு அவர்கள் ஆதரவு அளித்தார்கள் மேலும் அப்படி ராஜ பரம்பரையினர் மரபு மாறி செயல் புரிந்ததால், மக்களும் அவ்வழியையே பின்பற்றி, சிவரை ஆராதித்து சிவன் கோவிலுக்கு செல்லத் தொடங்கினார்கள். இப்படியாக குருவாயூர் கோவில் மிகவும் ஏழ்மை நிலைமைக்கு தள்ளப்பட்டது மேலும் கோவிலில் ஒரு விளக்கைக்கூட எரிய வைக்க முடியாத நிலைமை ஆட்கொண்டது. இப்படி இருக்கையில் ஒரு நாள், ஒரு பெரியவர் மம்மியூர் கோவிலுக்கு சென்று உணவும் இரவில் தங்க இடமும் அளிக்கும் படி கேட்டுக்கொண்டார். அந்நேரம் கோவில் நல்ல நிலைமையில் இருந்தாலும், அந்த கோவிலை பராமரித்தவர்கள் ஒன்றுமே இல்லாதது போல பாவனை செய்தார்கள் மேலும் கோபத்துடன் அவரை அருகாமையில் உள்ள குருவாயூர் கோவிலில் சென்று வசதிகளை பெற்றுக்கொள்ளும் படி இகழ்ந்து அவரை அங்கு அனுப்பினார்கள், அந்தக்கோவிலின் அப்போதைய நிலைமையை நன்றாக உணர்ந்துகொண்டே அவர்கள் அப்படி செய்தார்கள்.

அந்தப் பெரியவர் குருவாயூர் கோவிலின் வாயிலுக்கு வந்த உடன், ஒரு பிராம்மண சிறுவன் அவரை உடனுக்குடன் ஆதரித்து வரவேற்றான் மேலும் நன்றாகவே உணவு படைத்து அவருடைய விருப்பங்களை நிறைவேற்றினார்.

அந்தப்பெரியவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இவ்வாறு ஆசீர்வதித்தார். "நான் இங்கு மம்மியூர் கோவிலில் இருந்து வந்தேன், ஏன் என்றால் அங்கே அவர்கள் ஒன்றுமே இல்லை என்று சொன்னதனால்"என்று அவர் கூறினார்.

"மேலும் அவர்கள் இங்கே எல்லாமே நிறைய கிடைக்கும் என்றும் சொன்னார்கள். சரி, இன்று முதல் அது இங்கே அப்படியே ஆகக் கடவது!"என்றுரைத்தார். 

அந்த நாள் முதல், மம்மியூர் சிவர் கோவிலின் நிலைமை குறைய தொடங்கியது, மேலும் குருவாயூர் விஷ்ணு கோவிலின் புகழ் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து பரவத்தொடங்கியது

இந்த கோவிலில், இன்றும் இறைவன் அமர்ந்து, வரும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதினுடன், அடியவர்கள் புரிந்து கொண்டு ஆச்சரியப்படுகிற அளவுக்கு, ஒவ்வொரு நிமிடமும் திருவிளையாடல்களை நடத்தி வருகிறார்.

சரி! இங்கு நமக்கு என்ன உள்ளது?

குருவாயூரப்பனுக்கு சார்த்திய சந்தனத்தை கடுகளவு பிரசாதமாக கொடுப்பார்கள். அது ஒரு அற்புத மருந்து; ஏன் என்றால், தேவேந்திரன் பரிசளித்த சந்தானம் அரைக்கும் கல்லில் தினமும் தயாரிக்கப்படுகிறது.

குருவாயூரப்பனுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரம் என 365 விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. நாம் பார்க்கும் அலங்காரத்தை மறுபடியும் 364 நாட்களுக்கு பிறகுதான் பார்க்கமுடியும்.

சித்தன் அருள் வலைப்பூவில் உள்ளது மோகினி அலங்காரம்.

ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்....................... தொடரும்!

சித்தன் அருள் - 903 - ஆலயங்களும் விநோதமும் - லக்ஷ்மி வராஹ நரசிம்ஹர் கோவில், சிம்மாச்சலம், விசாகபட்டணம், ஆந்திர மாநிலம்!

$
0
0

வராக லட்சுமி நரசிம்மா் கோயில் என்பது சிம்மாச்சலம் என்னும் மலையில் அமைந்துள்ள ஒரு நரசிம்மர் கோயிலாகும். இக்கோயில் இந்தியாவின் மாநிலமான ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு அருகில் கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப் பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மலையடிவாரத்திலிருந்து மேலே செல்வதற்கு வண்டியில் இருபது நிமிடம் பிடிக்கிறது. படியில் ஏறிச் செல்ல விரும்புவோர் 1000 படிகள் எற வேண்டும்.

விஷ்ணு பக்தனான தன் மகன் பிரகலாதனைக் கொல்ல, இரண்யகசிபு எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவை பயனற்றுப்போன நிலையில், பிரகலாதனைக் கடலில் வீச ஆணையிட்டான். ஆனால், அவ்வாறு வீசும்போது விஷ்ணு சிம்மாச்சலம் மலைமீது இறங்கி பிரகலாதனைக் காத்தார். அதுதான் சிம்மாத்ரி (இன்றைய சிம்மாச்சலம்). முனிவர்கள் பக்தர்களின் வேண்டுகோளின்படி "வராக நரசிம்மராக"அங்கேயே குடிகொண்டார்.

இக்கோயிலின் தல புராணத்தின்படி தந்தையின் மறைவுக்குப் பிறகு பிரகலாதன் நரசிம்மருக்கு கோயில் கட்டினான். ஆதன்பிறகு, அந்த யுகத்தின் முடிவில் கோயில் கேட்பாரற்று அழியத் தொடங்கி, மூலவரைச் சுற்றி மணல் குவிந்தது. அடுத்த யுகத்தில் சந்திர வம்சத்தைச் சேர்ந்த புரூரவன் என்ற மன்னன் தெய்வீக சக்தியால் இந்த இடத்துக்கு வந்து அந்தச் சிலையைக் கண்டெடுத்து அழிவுற்ற கோயிலை மீண்டும் கட்டினான். அந்த நேரத்தில் ஒலித்த அசரிரீயானது, அந்த சிலை உருவத்தை காண இயலாமல் சந்தனத்தால் மூடி வைக்கும்படி கூறியது. ஆண்டுக்கு ஒரு முறையே அவருடைய உண்மை உருவை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டது. அது போலவே இன்றுவரை சந்தன மேனியுடனே நரசிம்மர் காட்சியளிக்கிறார். வைகாசி மாதம் வளர் பிறையில் மூன்றாம் நாள் சந்தன பூச்சு விலக்கப்பட்டு நரசிம்மரின் உண்மை தரிசனம் காட்டப்படுகிறது.

மூலவர் சந்தனப் பூச்சுடன் கூடிய சிவலிங்கம் போல காட்சித் தருகிறார். வைகாசி மாதம் சந்தன பூச்சு அகற்றப்பட்டு அவரின் மெய்யான உருவம் வெளிப்படுத்தப்படுகிறது. இதில் அவர் த்ரிபங்க தோரணையுடன், இரண்டு கைகள், காட்டுப் பன்றியின் தலை, சிங்க வால், மனித உடல் ஆகியவற்றுடன் காட்சி தருவார். இரு பக்கங்களிலும் ஸ்ரீதேவியும் பூதேவியும். கையில் தாமரையுடன் ஆண்டாள், லட்சுமி, ஆழ்வார் ஆகியோருக்குத் தனித் தனியே சன்னிநிதிகள் உள்ளன.

சரி! இங்கு நமக்கென என்ன உள்ளது?

வைகாசி மாதம் வளர்பிறை மூன்றாம்நாள் சந்தனகாப்பு, நான்கு மணி நேரம், அபிஷேக பூஜைக்காக அகற்றப்படும். அந்த நேரத்தில், மிக கடுமையான வெப்பம் அவர் சன்னதியிலிருந்து வெளிப்படும். சன்னதியை சுற்றி இருக்கும் கல் சுவர்கள் கூட வியர்வையை வெளிப்படுத்தும். அப்போது அபிஷேகத்துக்கு உள்ளே இருக்கும் பூஜாரி வியர்வையில் குளித்து, எல்லா லோகங்களையும் கண்டு ஒரு வழியாகிவிடுவார். மறுபடியும் சந்தனக்காப்பை பூசி விக்கிரகத்தை அலங்கரித்தபின், அந்த வெப்பம் குறையத்தொடங்கி, சிறிது நேரத்தில் சமன்பாடும்.

"உஷ்ணம் உஷ்னேன சாந்தி"என்ற மருத்துவ மொழிக்கு சான்றாக, அவருக்கு சார்த்திய சந்தானம், மிக சிறந்த மருந்தாக அமைந்துள்ளது. அந்த சந்தனம், சிறிது பிரசாதமாக கிடைக்கவேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........................ தொடரும்!

சித்தன் அருள் - 904 - ஆலயங்களும் விநோதமும் - சுப்பிரமணியர் கோவில், திருச்செந்தூர்!

$
0
0

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது.

அறுபடை வீட்டில், முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் இதுவாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் “திருச்சீரலைவாய்” என முன்னர் அழைக்கப்பட்டது.

முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்'என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்'என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்'என மருவியது.

முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு இலிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் இலிங்கம் இருக்கிறது. இவ்விரு இலிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.

ஒவ்வொரு நொடியும் அதிசயமும், ஆச்சரியமும் நடக்குமிடம். அதை உணர்ந்து கொள்ள நமக்குத்தான் பொறுமை வேண்டும்! இவர் கோவிலை சுற்றி சமாதியில் அமர்ந்திருக்கும் பெரியவர்களே இதற்கு சாட்சி.

முன்னொரு காலத்தில், இந்த பகுதி திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியின் கீழ் இருந்தது. ஒருநாள், மன்னரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், கடல்கொண்ட கோவிலில் இருந்த தன்னுடைய விக்ரகம், கடல் நீருக்கடியில் குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாகவும், அதை எடுத்து தற்போதைய கோவில் இருக்குமிடத்தில் வைத்து பூசை செய்யவும், உத்தரவிட்டார். மேலும், அந்த விக்ரகம் இருக்கும் இடத்துக்கு மேல், பூசை செய்த பூக்கள் மிதக்கும் எனவும், நிமிர்ந்து பார்த்தால், கருடர் ஆகாயத்தில் வட்டமிடுவார் எனவும் குறிப்பு கொடுத்துள்ளார்.

மறுநாள், மகாராஜா ஒருசிலரை அழைத்து படகில் சென்று நடுக்கடலில் பார்க்க, அங்கே பூஜை செய்த பூக்கள் மிதந்து கொண்டிருந்தது. ஆகாயத்தில் கருடர் பறந்துகொண்டிருந்தார்.

மகாராஜாவின் உத்தரவின் பேரில், கூட வந்தவர்கள் நீரில் குதித்து, கீழே இருந்த முருகர் விக்கிரகத்தை மேலே கொண்டு வந்தனர். அதுவே, திருச்செந்தூர் கோவிலில் "சண்முகர்"சன்னதியை அலங்கரிக்கிறது.

பின்னர் வந்த மாற்றங்களில், திருச்செந்தூர் இன்றைய தமிழகத்தின் ஒரு பகுதியாக மாறிடினும், முருகர் காட்சி கொடுத்து, தன்னை வெளிப்படுத்திய திருவிதாம்கூர் மகாராஜாவை போற்றும் விதமாக, இன்றும், அக்கோவிலின் முதன்மை பூஜாரி, திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட இடத்திலிருந்துதான், நியமிக்கிறார்கள்.

சரி! இங்கு நமக்கு என்ன உள்ளது!

நிறைய சொல்லலாம்! அத்தனை உண்டு. இருப்பினும் மிக உயர்ந்தது என கூறுவதானால், முருகருக்கு அபிஷேகம் செய்த விபூதியை, ஒரு இலையில் வைத்து பிரசாதமாக தருவார்கள். அப்படிப்பட்ட புனிதமான விபூதியைத்தான், முருகர் உவந்து, ஆதி சங்கரருக்கு கொடுத்து, அவரது வயிற்று நோயை குணப்படுத்தினார்.

இந்த விபூதி கிடைக்கவேண்டும், பஞ்சலிங்கம், சண்முகர் தரிசனம் கிடைக்கவேண்டும் என பிரார்த்தித்து கொள்ளுங்கள்.

திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு. ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு ‘கங்கை பூஜை’ என்று பெயர்.  

கோபுரத்தில் எங்கோ ஓரிடத்தில் அனுமன் சிலை உள்ளது. எல்லா மாதமும் அனுமார் அங்கு வந்தமர்ந்து, தனது மூல நட்சத்திரத்தன்று, முருகரை கண்டு, ஆரத்தழுவும் நாள்.

திருச்செந்தூர் கோவிலில் தினமும் காலை 5 மணிக்கு நடக்கும் கொடிமர நமஸ்கார பூஜை மிக முக்கியமானது. ஒருவர் மந்திரம் ஓத மற்றவர்கள் அனைவரும் அதை கூறி, கொடிமரத்துக்கு நமஸ்காரம் செய்வார்கள். இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். பின்னர் கொடிமரத்துக்கு பூஜை, தீபாராதனை நடக்கும். அதற்குப் பின்தான் மூலவர் சுப்ரமண்யருக்கே பூஜை, தீபாராதனை நடைபெறும். அங்கு சென்றால், இதில் தவறாது கலந்து கொள்ளுங்கள்.

பிறப்பிலிருந்து இறப்பு வரை தவமிருந்து பெறும் பலனை, ஒருநாள், திருச்செந்தூரில் உபவாசம் இருந்து முருகனை தரிசித்தால், எளிதாக பெற்றுவிடலாம் என சூதமா முனிவர் உரைத்துள்ளார்.

திருச்செந்தூரை நினைக்கும் பொழுது, அடியேனுக்கு, நம் குருநாதர் அகத்தியப்பெருமான் ஒருமுறை நாடியில் உரைத்த விஷயம்தான் ஞாபகத்துக்கு வரும்.

"முருகன் கோபப்பட்டால் நல்லது நடக்கும்! ஆனால். முருகன் வருத்தப்பட்டால், என்ன நடக்கும் என, எங்களுக்கே தெரியாது"என்றார்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..................... தொடரும்!

சித்தன் அருள் - 905 - ஆலயங்களும் விநோதமும் - பகவதி கோவில், சோட்டானிக்கர, எர்ணாகுளம், கேரள மாநிலம்!

$
0
0

சோட்டானிக்கரையில் ‎பகவதி வழிபாடு மிகவும் பிரபலமானதாகும். அன்னை ‎பகவதியை இறைவன் திருமாலுடன் இந்தக் கோவிலில் ‎பக்தர்கள் வழிபடுகின்றனர். ஆகையினால் எங்கும் பக்தர்கள் அன்னையை "அம்மே நாராயணா!"என்று அழைப்பதை காணலாம்.  மேலும் அன்னை பகவதி ஒவ்வொரு ‎நாளன்றும் மூன்று உருவங்களில் காட்சி அளிக்கிறாள். ‎காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதியின் ‎ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும்; நண்பகலில் சௌபாக்கியம் ‎தரும் அன்னை மகாலட்சுமியாக, ஆழ்சிவப்பு வண்ண உடையிலும், ‎மாலையில் வீரத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக, கரும் நீல ‎வண்ண உடையிலும், காட்சி தந்து பக்தர்களை உய்வித்து அருள்பாலித்து வருகிறாள்.

ஆதிசங்கரர் இந்த வழியாக சென்ற பொழுது, அன்னை, தீப ஜோதியாக தோன்றி அருகில் இருந்த பாறைக்குள் மறைந்ததாகவும், அதை உணர்ந்த ஆதி சங்கரர், அன்னைக்கு இங்கு கோவில் எழுப்பி, பூசை செய்தார். ஆதலினால், இன்றுவரை, இங்கு விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. காலையில் அபிஷேக நேரத்தில் இதை காணலாம். பின்னர் அன்னையின் உருவ கவசம் வைத்து பூசை செய்வார்கள்.

அதர்வணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மனம் சம்பந்தமான நோய்களுக்கும், மிக சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.

சரி! இங்கு நமெக்கென்ன உள்ளது?

இந்த கோவிலின், கீழ்ப்புறத்தில் உள்ள கீழ்க்காவில் தினமும் இரவு நடைபெறும் "குருதி பூசையை"காணவேண்டும். அதன் பின்னர் அங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதத்தை, வாங்கி, வீட்டில் நிழலில் உலர்த்தி, தினமும் சிறிதளவு உண்டுவந்தால், மேற்கூறிய உடல் பிரச்சினைகள் விலகி, நிம்மதியாக வாழலாம்.

அனைத்து, அதர்வண பிரச்சினைகளையும், துடைத்து சுத்தம் பண்ணி, ஒருவரை நிம்மதியாக வாழ வைக்கும் ஸ்தலம்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
Viewing all 1950 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>